ஜெனி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடிக்கும் பாக்கியா, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
ஜெனி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடிக்கும் பாக்கியா, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய
ஜெனி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடிக்கும் பாக்கியா, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
ஜெனி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடிக்கும் பாக்கியா, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவின் புடவையை பார்த்து இதே போல புடவை என்னிடம் இருப்பதாக பாக்கியா காட்டுகிறார். ஜெனி கர்ப்பமாக இருப்பதை பாக்கியா கேட்டு தெரிந்து கொள்கிறார். பின்னர் குடும்பத்தினரிடம் சொல்லி மகிழ்ச்சி அடைகின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனிக்கு வாந்தி வருவதால் கஷாயம் கொண்டு போய் கொடுத்து குடிக்க சொல்கிறார். இதை குடித்தால் இனிமேல் வாந்தி வராது என சொல்கிறார். பின்னர் ராதிகாவுக்கு சாப்பாடு கொடுக்க செல்கிறார். ராதிகா வாங்கிய புடவைக்கு ஜாக்கெட் தைப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். பாக்கியாவும் செல்வியும் டேபிள் மேலே இருந்த புடவையை பார்த்து இது உன் புடவை போலவே இருக்கிறது. ஆனால் கலர் தான் வேற என பேசிக் கொள்கின்றனர்.

ராதிகா என்னாச்சு என கேட்க, இதே போல புடவை என்னிடம் உள்ளது என சொல்கிறார். மொபைலில் இருந்து போட்டோவை காட்டுகிறார். அதை பார்த்த ராதிகா ஆமாம் அதே போல தான் உள்ளது என சொல்கிறார். ஆனால் நான் இந்த கலரில் தான் எடுத்தேன். வீட்டிற்கு வரும் போது வேறு கலராக மாறிவிட்டது. பில் போடும் இடத்தில் மாறி இருக்கும் என நினைக்கிறன் என சொல்கிறார். இது இனியா அப்பா வாங்கி கொடுத்தது, இல்லையென்றால் நீங்க சொன்னதுமே நான் எடுத்து வந்து கொடுத்திருப்பேன் என சொல்கிறார்.

தனத்திடம் கண்ணன் பற்றி பேசி கவலைப்படும் லட்சுமி அம்மா, தவறாக நடக்க இருப்பது போல கனவு காணும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அதெல்லாம் ஒன்றும் வேணாம் டீச்சர், இந்த புடவையை விட நீங்க வாங்குன புடவை கலர் தான் நன்றாக இருக்கிறது என சொல்கிறார். சாப்பாடு கொடுத்துவிட்டு வெளியே வந்த பின்னர், செல்வி நான் சொன்னேன்ல சார் தான் ராதிகாவுடன் சேர்ந்து கடைக்கு சென்றிருக்கார் என சொல்கிறார். உடனே பாக்கியா கோவப்பட்டு இனியா அப்பா பற்றி என்னிடமே சொல்றியா, நானும் பார்க்கிறேன் இரண்டு நாளாக இப்படியே பேசுகிறாய், இனி இப்படி பேசினால் அப்பறம் என் தோழி என பார்க்காமல் உன்னை அனுப்பிவிடுவேன் என சொல்கிறார்.

சரி சரி இனிமேல் எதுவும் சொல்லமாட்டேன் என சொல்கிறார். பாக்கியா ஜெனியை பார்க்க வர சோகமாக இருக்கிறார். என்னாச்சு இப்போ உடம்பு எப்படி இருக்கிறது என கேட்க, நன்றாக இருக்கு ஆண்டி என சொல்கிறார். ஆனால் பாக்கியா இரண்டு பேரும் சேர்ந்து என்னிடம் எதோ மறைக்கிறீங்க என கேட்க ஜெனி அழுதுவிடுகிறார். இவ ஏன் அழுகிறார் அப்போ கண்டிப்பாக எதோ மறைக்கிறீங்க என கேட்க, ஜெனி மாசமாக இருக்கும் உண்மையை சொல்கிறார்.

இரட்டை குழந்தை பற்றி உண்மையை தெரிந்து கொண்ட வெண்பா, குற்ற உணர்ச்சியில் சௌந்தர்யா – இன்றைய ” பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அதை கேட்டு பாக்கியா மகிழ்ச்சி அடைகிறார். உடனே ஜெனியை கீழே கூட்டிக் கொண்டு வந்து பாட்டி தாத்தாவிடம் ஜெனி மாசமாக இருப்பதை சொல்கிறார். அதை கேட்டு பாட்டி சந்தோஷத்தில் இருக்கிறார். ஆனால் செழியன் எந்த சந்தோஷமும் இல்லாமல் ஜெனி மீது கோவத்தில் இருக்கிறார். பாட்டி உன் அம்மா அப்பாவிடம் சொல்லிவிடு என சொல்கிறார். அப்போது செல்வி வர அவருக்கு விஷயம் தெரிந்து, ஜெனியே ஒரு பாப்பா அவளுக்கு ஒரு பாப்பாவா என கேட்கிறார். செழியன் வந்ததும் அவனையும் மகிழ்ச்சியில் கொஞ்சுகின்றனர்.

டாக்டரிடம் சென்றுவிடுவோம் என சொல்ல நான் கூட்டி செல்கிறேன் என செழியன் சொல்கிறார். அதற்கு பாக்கியா நாங்க எதற்கு இருக்கோம் என சொல்லி நாங்களே கூட்டி செல்கிறோம் என சொல்கிறார். அதன் பின்னர் செழியன் கோவத்தில் ஜெனியை பார்க்கிறார். பின்னர் மாடிக்கு செல்ல, ஜெனியும் மாடிக்கு செல்கிறார். பாக்கியாவை ஸ்வீட் செய்ய சொல்லி, கோபிக்கு போன் செய்து சொல்ல சொல்கிறார் பாட்டி. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!