அன்னையர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாக்கியா, அம்மாவை நினைத்து பயப்படும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவின் ஸ்கூலில் அன்னையர் தினம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாக்கியா வருகிறார். ஆனால் இனியா பாக்கியா எப்படி நடந்துக் கொள்வார் என நினைத்து கவலைப்படுகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவின் ஸ்கூலிற்கு அன்னையர் தின நிகழ்ச்சிக்காக பாக்கியா கிளம்புகிறார். அங்கே இனியாவின் அம்மா வந்திருக்கின்றனர். அவர்கள் நல்ல வேலையில் இருக்கின்றனர். ஆனால் பாக்கியாவிற்கு சமையல் மட்டுமே தெரியும் என்பதால் இனியாவின் நண்பர்கள் கிண்டல் செய்கின்றனர். பின்னர் பாக்கியா ஒரு பக்கம் நிற்க இனியாவின் நண்பர்கள் உன் அம்மா சமையல் செய்ய இருக்கிறார்களா என கிண்டல் செய்கின்றனர்.
பின் போட்டி தொடங்க இனியா பயத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார். அவர் அவர் தன் திறமையை வெளியே காட்ட பாக்கியாவும் சமையல் செய்ய தொடங்குகிறார். மற்றவர்கள் புதிய புதிய திறமைகளை காட்டுகின்றனர். ஆனால் பாக்கியா வெறும் சமையல் மட்டும் செய்கிறார். பின்னர் நடுவர்கள் வந்து எப்படி இருக்கிறது என கேட்கின்றனர். பாக்கியா செய்ததை பார்த்து இனியா வருத்தப்படுகிறார்.
இனியாவின் தோழியின் அம்மாவின் திறமையை பார்த்து இனியா வருத்தப்படுகிறார். நடுவர்கள் ஒன்று ஒன்றாக பார்க்க, இனியா பாக்கியாவிடம் சென்று அம்மா சூப்பராக பேசுகிறார்கள் என சொல்கிறார். மற்றவர்கள் திறமை வெளியிப்படுத்துகின்றனர். ஆனால் உன்னை பாரு எப்படி வடைகடை மாதிரி செய்து வைத்திருக்க என சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா வருத்தப்படுகிறார். பின்னர் இனியா எல்லாரும் நன்றாக செய்கின்றனர். நாம் இங்கிருந்து கிளம்பிருவோம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.