ராதிகா புடவை மாறியதை சமாளிக்கும் கோபி, பாக்கியாவை அன்னையர் தினம் நிகழ்ச்சிக்கு அழைக்கும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
ராதிகா புடவை மாறியதை சமாளிக்கும் கோபி, பாக்கியாவை அன்னையர் தினம் நிகழ்ச்சிக்கு அழைக்கும் இனியா - இன்றைய
ராதிகா புடவை மாறியதை சமாளிக்கும் கோபி, பாக்கியாவை அன்னையர் தினம் நிகழ்ச்சிக்கு அழைக்கும் இனியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
ராதிகா புடவை மாறியதை சமாளிக்கும் கோபி, பாக்கியாவை அன்னையர் தினம் நிகழ்ச்சிக்கு அழைக்கும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவிடம் வேறு புடவையை கொடுத்து இது தான் அந்த புடவை என கோபி சொல்லி சமாளிக்கிறார்.அன்னையர் தின நிகழ்ச்சிக்கு பாக்கியாவை கட்டாயம் வர சொல்லும் இனியா.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவுக்கு வேறு கலர் புடவை வாங்கிக் கொண்டு கோபி செல்கிறார். அதை பார்த்ததும் ராதிகா வேறு புடவை போல உள்ளது என சொல்கிறார். இந்த புடவை தான் வாங்குனோம். அதை நீ காரில் வைத்துவிட்டாய் அதை நான் அப்படியே எடுத்துக் கொண்டு வந்தேன் என சொல்லி கோபி சமாளிக்கிறார். உடனே ராதிகா இதே டிசைன் தான் ஆனால் வேறு கலர் என சொல்ல பில் போடும் இடத்தில் எதாவது மாற்றம் நடந்திருக்கும் நாம் கடைக்கு சென்று பார்ப்போமா என ராதிகா சொல்கிறார்.

உடனே கோபி பதட்டம் அடைந்து அதெல்லாம் வேண்டாம் என சொல்லி சமாளிக்கிறார். ஆனால் எதோ நடந்திருக்கு என சொல்ல அதெல்லாம் ஒன்றுமில்லை என கோபி சமாளிக்கிறார். பின்னர் எழிலிற்கு அமிர்தா போன் செய்கிறார்.வர இன்னும் சிறிது நாள் ஆகும் போல இங்கே எல்லாரிடமும் அப்பா எனக்கு கணேஷ் போய்ட்டான் ஆனால் அவன் போலவே ஒரு பையன் கிடைத்துள்ளான் என சொல்கிறார். உடனே எழில் சந்தோசப்பட இனியா யாரிடம் போன் பேசுகிறாய் என கேட்கிறார்.

நகையை அடமானம் வைக்க செல்லும் கண்ணன், உதவி செய்யும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அமிர்தாவிடம் என சொல்ல, என்ன அடிக்கடி அந்த அக்காவிடம் பேசுகிறாய் என சொல்கிறார். உடனே அந்த அக்கா மட்டுமல்ல அவங்க குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் பேசுவேன் என சொல்கிறார். இரவு தூங்கும் போது பாக்கியா சேலை வாங்கி கொடுத்ததை நினைத்து சந்தோசப்படுகிறார். சேலையை எடுத்து பார்த்து முத்தம் கொடுக்கிறார். பின்னர் அதை கட்டிக் கொண்டு கோபியிடம் காட்ட செல்கிறார். கோபி ரூமில் சென்று வெக்கபட்டுக் கொண்டு நிற்கிறார்.

கோபி என்னாச்சு பாக்கியா எதாவது பேசணுமா என கேட்கிறார். பாக்கியா நீங்க வாங்கி கொடுத்த புடவை என சொல்ல, இந்த இரவு நேரத்தில் எதற்கு கட்டிட்டு வந்திருக்க என கேட்க காலையில் பசங்க இருப்பாங்க கிண்டல் செய்வாங்க என சொல்கிறார். புடவை நன்றாக இருக்க என கேட்க, நல்லா இருக்கு என கோபி சொல்கிறார். புடவை நன்றாக இருக்க இல்லை எனக்கு நல்லா இருக்க என்ன சொல்கிறார். சரி நீங்க தூங்குங்க நான் காட்ட தான் வந்தேன் என சொல்லி பாக்கியா அங்கிருந்து கிளம்புகிறார்.

வெண்பாவிற்கும் பாரதிக்கும் திருமணம் ஆகாத உண்மையை சொல்லும் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

வெளிய வந்து பாக்கியா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.இரவு நடந்ததை நினைத்து பாக்கியா சிரித்துக் கொண்டிருக்க செல்வி அவரை எழுப்பி எதற்கு சிரிக்கிற எல்லாரும் உன்னை பார்க்கிறார்கள் என சொல்கிறார். உடனே இனியா ஸ்கூலில் மதர்ஸ் டே நிகழ்ச்சி இருக்கிறது என சொல்கிறார். உடனே பாக்கியா வரவில்லை என சொல்ல ஏன் என பாட்டி கேட்கிறார். அங்கு நிறைய போட்டி நடைபெறும் அதில் வெற்றி பெற்றவர்கள் தான் சிறந்த மதர் என சொல்கிறார். நீ வரவில்லை என்றால் நான் உன்னோடு பேசமாட்டேன் என இனியா சொல்கிறார். எங்க அப்பா இருக்கும் வரை நான் டான்ஸ் ஆடுவேன் என சொல்கிறார் பாக்கியா. நான் பெயர் கொடுத்துவிட்டேன் என இனியா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!