ஜெனியை கூட்டி வர செல்லும் செழியன், அனுப்ப மறுக்கும் ஜோசப் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ஜெனியை கூட்டி வர செல்லும் செழியன், அனுப்ப மறுக்கும் ஜோசப் - இன்றைய
ஜெனியை கூட்டி வர செல்லும் செழியன், அனுப்ப மறுக்கும் ஜோசப் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ஜெனியை கூட்டி வர செல்லும் செழியன், அனுப்ப மறுக்கும் ஜோசப் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா இனியாவை வீட்டிற்கே கொண்டு வந்து விடுகிறேன் என சொல்ல, கோபி வேண்டாம் என தடுக்கிறார். உடனே ராமமூர்த்தி காலையில் போல இப்போதும் கூட்டிக் கொண்டு வருவோம் என சொல்லி கிளம்புகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா இன்னும் வராமல் இருக்க கோபி பதட்டமாக இருக்கிறார். உடனே பாக்கியா ராதிகாவுக்கு போன் செய்ய இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவோம் நானே கூட்டிக் கொண்டு வந்துவிடுகிறேன் என சொல்கிறார். என்னது வீட்டிற்கு வராங்களா என கோபி பதட்டமடைய பாக்கியாவை தனியாக அழைத்து அவர் நம்ம வீட்டிற்கு வர வேண்டாம் அப்படி வந்தால் அப்பறம் நான் எல்லா உண்மையையும் அம்மா அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறார்.

உடனே பாக்கியா எழிலை கூட்டிக் கொண்டு வந்து விடு என சொல்ல, எழில் சரி என சொல்கிறார். அந்த நேரம் பார்த்து எழிலிற்கு முக்கியமான போன் ஒன்று வர என்னால் போக முடியாது என சொல்கிறார். உடனே ராமமூர்த்தி காலையில் நாம் தானா கொண்டு சென்றுவிட்டோம் இப்போதும் நாமளே கூட்டிக் கொண்டு வருவோம் என சொல்லி கிளம்புகிறார். உடனே கோபி ராதிகா கண்ணில் மாட்டாமல் இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு வர வீட்டு வாசலில் நிற்காமல் தள்ளி நிற்கிறார்.

மீனாவை வீட்டு வேலை செய்ய சொல்லும் தனத்தின் அம்மா, குழந்தை நினைப்பாக இருக்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அப்போது ராதிகா கார் வர தாத்தா இறங்கி சென்று இனியாவை அழைத்து வருகிறார். அப்போது கோபி எதுவும் நடக்க கூடாது என குழப்பத்தில் இருக்க, இனியா வண்டியில் ஏறி விடுகிறார். இனியாவிடம் கோபி ட்ரிப் பற்றி பேச கேட்க இனியா எதுவும் பேசாமல் இருக்கிறார். இனியாவிற்கு எதாவது தெரிந்திருக்குமா என பயத்தில் இருக்க இனியா வீடு வரை எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் வீட்டிற்கு வந்ததும் இனியாவிடம் கோபி என்னாச்சு டாடி மீது கோவமா என கேட்கிறார். நான் ஏன் கோவமாக இருக்க போகிறேன் என இனியா சொல்ல நான் சரியாக கவனிக்கவில்லை என இனியா சொல்கிறார்.

பின் கோபி ராதிகாவுக்கு போன் செய்து வந்துவிட்டிங்களா என கேட்டு எதுவும் நடக்காததை நினைத்து நிம்மதி அடைகிறார். பின் கோபியின் தந்தை நீ காலையில் இருந்து சரி இல்லை என சந்தேகமாக கேட்க இனியா போன வருத்தம் தான் என சொல்கிறார். பின் செழியன் பாக்கியாவிடம் ஜெனி இப்படி சென்றுவிட்டாள் என்னால் அவள் இல்லாமல் இருக்க முடியவில்லை நீ பேசு என சொல்ல உன்னால் தான் எல்லாம் நடந்தது அதனால் தான் இதெல்லாம் நடக்கிறது என செழியன் சொல்கிறார்.

ஹேமா, அஞ்சலியுடன் சந்தோசமாக இருக்கும் கண்ணம்மா, ஹேமா நினைப்பாக இருக்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

செழியன் உன் பையன் எழில் வந்து சொன்னால் எல்லாம் கேட்ப எனக்கு எதுவும் பண்ணமாட்டா என சொல்கிறார். எனக்காக எதாவது பண்ணு என சொல்லி ஜெனியை வர சொல்லு என சொல்கிறார். பாக்கியா முடியாது என சொல்ல, செழியன் நானே பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். பாக்கியா இவன் ஏன் இப்படி இருக்கிறான் என நினைத்து வருத்தப்படுகிறார். பின் செழியன் ஜெனி வீட்டிற்கு செல்கிறார். ஜோசப் அவரை பார்த்து கோவப்பட, வீட்டில் எல்லாரும் நன்றாக இருக்காங்களா என மரியம் கேட்கிறார்.

ஜெனி எப்படி இருக்கிறாள் அவளை பார்த்துவிட்டு போகலாம் என வந்தேன் என சொல்கிறார். அப்போது ஜோசப்யிடம் இன்னும் வேலைக்கு போகவில்லையா என கேட்க எப்போதும் வேலை பற்றி மட்டும் நினைக்க கூடாது குடும்பத்தையும் பார்க்க வேண்டும் என சொல்கிறார். உடனே ஜெனி வர உன்னை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு செல்ல வந்திருக்கேன் என செழியன் சொல்ல, ஜோசப் அவள் எங்கேயும் வரமாட்டாள் இங்கே தான் இருப்பாள் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!