அம்மா வீட்டிற்கு செல்லும் ஜெனி, வருத்தத்தில் இருக்கும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனியின் அம்மா வந்து கூப்பிட ஜெனி அவர்களுடன் கிளம்புகிறார். உடனே செழியன் வேண்டாம் என சொல்ல, ஆனால் கேட்காமல் ஜெனி கிளம்புகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி அவரது வீட்டிற்கு கிளம்ப செழியன் போக வேண்டாம் என தடுக்கிறார். ஆனால் ஜெனி கேட்காமல் கிளம்ப, பாக்கியா அங்கே வருகிறார். ஜெனி பாக்கியாவிடம் அம்மா கூப்பிட்டதும் நான் கிளம்பியது தப்பா என கேட்க அதெல்லாம் இல்லை நீ அங்கே சென்று சில நாள் நிம்மதியாக இருந்துவிட்டு வா என சொல்கிறார். அப்போது செழியன் ஜெனி இல்லாமல் ஒரு மாதிரி இருக்கும் என வருத்தப்பட ஜெனி கிளம்ப பாக்கியா உதவி செய்கிறார்.
பின் கிழே வந்து ஜெனி அம்மா அப்பாவிடம் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என சொல்ல, பாட்டியும் வந்து மீண்டும் குழந்தை பிறக்கும் எதையும் நினைக்காமல் இருக்க வேண்டும் என சொல்கிறார். தாத்தா உடம்பு சரியானதும் வேலைக்கு போறதை பற்றி நினைக்கலாம் என சொல்கிறார். உடனே ஜெனி கிளம்ப செழியன் பிரிய மனம் இல்லாமல் அனுப்பி வைக்கிறார். இந்த பிரச்சனைகளால் செழியனால் வேலை செய்ய முடியாமல் இருக்க, கோபியிடம் சொல்லி வருத்தப்படுகிறார்.
ஆண் குழந்தையை பெற்றெடுத்த தனம், சந்தோஷத்தில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
உடனே கோபி மூன்று பிள்ளைகளை அமர வைத்து ஆதரவாக பேசுகிறார். அதை பார்த்து எழில் பாக்கியாவிடம் கண்ணை காட்டுகிறார். பாக்கியா அதை பார்த்து சந்தோசப்படுகிறார். அதன் பின் இனியா மற்றும் பாக்கியா ராதிகா வீட்டிற்கு வருகிறார். ஜெனி எங்கே என கேட்க வீட்டில் நடந்ததை சொல்கிறார். உடனே ராதிகா இனியா மற்றும் மயூராவிற்கு சாக்லேட் கொடுக்க, இனியா அம்மா இவங்க நாளைக்கு பிக்னிக் போறாங்களாம் என சொல்கிறார்.
இனியாவும் அவர்களுடன் போவேன் என சொல்ல, பாக்கியா வேண்டாம் என சொல்கிறார். இனியா அப்பாவிடம் கேட்க வேண்டும் என பாக்கியா சொல்ல, ராதிகா அனுப்பி வைங்க என சொல்கிறார். இனியாவும் நான் போவேன் என பிடிவாதகமாக இருக்கிறார். உடனே பாக்கியா நான் கேட்டுவிட்டு சொல்கிறேன் என அங்கிருந்து கிளம்ப வீட்டிற்கு வந்ததும் இனியாவிடம் யார் கூப்பிட்டாலும் வரேன் என்று சொல்லிவிடுவியா என கேட்கிறார்.
ஹேமா, லட்சுமியை கோவிலுக்கு அழைத்து செல்லும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
அப்போது இனியா நீயும் அங்கே தான இருந்த அப்பறம் என்ன என கேட்க, அப்பாவிடம் கேட்க வேண்டாமா என கேட்கிறார், அவர் ஒன்றும் சொல்லமாட்டார் நீ மட்டும் எல்லா இடங்களுக்கும் செல்கிறாய் என்னை எங்கையாவது கூட்டிக் கொண்டு போறியா என கேட்கிறார். உடனே பாக்கியா அப்பாவிடம் கேட்போம் என சொல்ல, அவர் ஒன்றும் சொல்லமாட்டார் நான் போவேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Pls change the chelian character with anyone person acting this character
Because Elizl character is good acting but chelian acting is very very very bad acting