கோபிக்காக காத்திருக்கும் மயூரா, குடும்பத்தை விட்டு வருவாரா கோபி? இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபிக்காக காத்திருக்கும் மயூரா, குடும்பத்தை விட்டு வருவாரா கோபி? இன்றைய
கோபிக்காக காத்திருக்கும் மயூரா, குடும்பத்தை விட்டு வருவாரா கோபி? இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபிக்காக காத்திருக்கும் மயூரா, குடும்பத்தை விட்டு வருவாரா கோபி? இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட மயூரா அங்கிள் வருவாரு என காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி வந்து சந்தோசமாக தீபாவளிக்கு வெடி வெடிக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூரா தீபாவளிக்கு வெடி வெடிக்காமல் காத்துக் கொண்டிருக்கிறார். ராதிகா மத்தாப்பு கொளுத்தலாம் என சொல்ல, இல்லை அங்கிள் என்னிடம் சொல்லிருக்காரு வருவாரு என மயூரா சொல்கிறார். ராதிகா அம்மா மயூரா இப்படி நடந்து கொள்வதை பார்த்து கோவமாக இருக்கிறார். அவருடைய குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிக் கொண்டிருப்பார். உன்னால் தான் குழந்தை இப்படி இருக்கிறாள் என ராதிகா அம்மா சொல்கிறார்.

தமிழகத்தின் 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

மறுபக்கம் பாக்கியா செய்த ஸ்வீட்ஸ் சாப்பிட்டு அனைவரும் நன்றாக இருக்கிறதாக சொல்கிறார்கள். ஆனால் கோபி எதையோ யோசித்து கொண்டிருப்பது போல இருக்க ஆபிஸ் வரை போக வேண்டும் என பாக்கியவிடம் சொல்கிறார். ஈஸ்வரி இந்த நேரத்தில் எதற்கு ஆபிஸ் என கேட்க, அங்கே வேலை பார்ப்பவர்களுக்கு ஸ்வீட்ஸ் கொடுக்க வேண்டும் என சொல்ல, அம்மா தான் வீட்டில் செய்றாங்க ஏன் அவங்களிடம் கொடுக்கவில்லை என எழில் கேட்க, எனக்கு வேலையில் மறந்துவிட்டது என கோபி சொல்கிறார்.

பின் கோபி நான் போக வேண்டும் என சொல்ல ராமமூர்த்தி போக விடாமல் செய்கிறார். ஆனால் கோபி நான் போயிட்டு சீக்கரம் வந்துருவேன் என சொல்ல, பாக்கியா எண்ணெய் சட்டியை தூக்கி கையில் சுட்டுக் கொள்கிறார். அனைவரும் பாக்கியாவை பார்த்துக் கொண்டிருக்க கோபி கிளம்ப முடியாமல் வருத்தத்தில் இருக்கிறார். எழில் பாக்கியாவிற்கு மருந்து போட கோபி ராதிகா வீட்டிற்கு கிளம்புகிறார். பின் மயூரா கோபி வருகிறாரா என காத்துக் கொண்டிருக்க, ராதிகா அம்மா நான் ஊருக்கு கிளம்புகிறேன் என சொல்கிறார்.

கண்ணனை புரிந்து கொண்ட மூர்த்தி, இட்லி கடை தொடங்கிய ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அவர் வரப்போவது இல்லை, அவருக்கு குடும்பம் இருக்கிறது என சொல்கிறார். ராதிகா கோவமாக வா வெடி வெடிக்கலாம் கோபிக்காக காத்திருந்தது போதும் என சொல்கிறார். அப்போது கோபி வர மயூராவை ஏன் திட்டுற என கேட்கிறார். அவள் உங்களுக்காக காத்திருப்பதாக சொல்ல, கோபி நான் நிறைய வெடி வாங்கி வந்திருக்கேன் என சொல்கிறார். கோபி மயூரா மற்றும் ராதிகா வெடி வெடிக்கின்றனர். பின் கோபி ஸ்வீட்ஸ் எல்லாம் சாப்பிட டீச்சர் கொண்டு வந்தாங்க என சொல்கிறார். தீபாவளி ஸ்வீட்ஸ் நானே பண்ணிருப்பேன் என ராதிகாவின் அம்மா சொல்ல கோவமாக இருக்கிறார்.

பின் மயூரா தூங்க கோபி தீபாவளி அன்று உங்களுடன் தான் இருக்க போறேன் என சொல்கிறார். நாளை முழுவதும் நான் மயூராவுடன் தான் இருக்க போகிறேன் என சொல்கிறார். கோபி வீட்டில் அனைவரும் சாப்பிடாமல் இருக்க ராமமூர்த்தி இன்னும் உன் பையனை காணவில்லை என கேட்கிறார். கோபி பாக்கியா எடுத்துக் கொடுத்த ட்ரெஸ் உடன் வர பாக்கியா அதை பார்த்து சந்தோசமாக இருக்கிறார். ஈஸ்வரி நீ வாங்கி கொடுத்ததா நன்றாக இருக்கிறது என சொல்கிறார். அனைவரும் சேர்ந்து சாப்பிட இனியா என்ன பிளான் இன்னைக்கு என கேட்கிறார். கோபி இங்கே இருந்து எப்படி போவது என தெரியாமல் இருக்கிறார். கோபி ஆபிஸில் வேலை செய்பவருக்கு போன் செய்து ஆபிசில் வேலை இருக்கிறது என என்னை கூட்டி செல் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!