பாக்கியாவை திட்டிய கோபி, ஊருக்கு கிளம்புவதாக சொல்லும் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் எழில் செழியன் சண்டை போட்டத்தை பார்த்து கோபி சத்தம் போடுகிறார். பின் செழியனிடம் ஜெனி நீ செய்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருப்பேன் என நினைக்காதே என சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் எழில் செழியன் சண்டையை பார்த்து கோபி கோபப்படுகிறார். அப்போது பாக்கியா மாடிக்கு வர உன்னால் தான் எல்லாம் நடப்பதாக சொல்கிறார். பின் நான் என்ன செய்தேன் என சொல்ல நீ தான் பணம் பணம் என கேட்கிறாய் அதனால் தான் இந்த வீட்டில் பிரச்சனை வருகிறது என சொல்கிறார். அவர்கள் இருவருக்கும் சண்டை அதை தான் நான் கேட்டேன் ஆனால் அவன் என்னை காரணம் சொல்கிறான் என சொல்ல, நீ சமையல் செய்ய ஜெனியை கூட்டிக் கொண்டு செல்கிறாய் அதனால் தான் இவ்வளவு பிரச்சனை என சொல்கிறார்.
இந்த ரூமிற்குள் வந்தால் எவ்வளவு பணம் கேட்பாய் என தெரியவில்லை அவ்வளவு பயமாக இருக்கிறது என சொல்கிறார். பின் பாக்கியா அதை எல்லாம் நினைத்து வருத்தப்படுகிறார். பின் ஜெனி செழியனிடம் நீ ஆண்டியிடம் பேசியது தவறு என சொல்ல, எல்லா பிரச்சனைக்கு காரணம் என சொல்கிறார். பின் இப்படி பேசுவதை நிறுத்து உனக்கு அறிவு இல்லையா என கேட்க, தேவை இல்லாத வார்த்தைகளை விடுகிறாய் என சொல்கிறார். அப்போது ஜெனி ஆண்டியை அங்கிள் திட்டினால் அவர் கேட்பது போல நான் கேட்கமாட்டேன் என சொல்கிறார்.
பின் ஜெனிக்கும் செழியனுக்கும் வாக்குவாதம் வர ஜெனி கிளம்பி வெளியே போகிறார். அங்கே பாக்கியா கவலைப்பட்டு அழுது கொண்டிருக்க, ஜெனி வந்து ஆண்டி நீங்க கவலைப்படாதீங்க என சொல்கிறார். அப்போது பாக்கியா என்னை பற்றி நீ கவலை படாதே நான் பார்த்துக் கொள்கிறேன் நீ உன் வாழ்க்கையை பாரு என சொல்ல, ஜெனி அவரை நினைத்து அழுகிறார். நான் என் அப்பாவிடம் பணம் கேட்டது தவறு தான் என சொல்லி வருத்தப்படுகிறார்.
பாரதியின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணையம் வைத்த கண்ணம்மா, கடுப்பில் வெண்பா – இன்றைய எபிசோட்!
பாக்கியா நடந்ததை எல்லாம் நினைத்து கவலைப்பட ஈஸ்வரி வருகிறார். அவரிடம் கோபி எங்கே என கேட்க, அவர் மேலே இருக்கிறார் என சொல்கிறார். நடந்த பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும் என சொல்ல, ஆனால் பாக்கியாவிடம் ஈஸ்வரி நானும் மாமாவும் ஊருக்கு போகலாம் என முடிவு செய்துள்ளதாக சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைய ஈஸ்வரியிடம் நீங்க இருவரும் நல்லா இருக்கும் போது எனக்காக எல்லாம் செய்தீர்கள் இப்போது நாங்க எல்லாம் உங்களுக்கு செய்ய வேண்டும் என்னை விட்டு போகாதீங்க அதை என சொல்கிறார்.