கோபி போனை பார்த்து சந்தேகப்பட்ட பாக்கியா, துபாய் போக முடிவு செய்யும் ராதிகா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவுக்கு வருத்தப்பட்டு மெசேஜ் அனுப்ப அதனால் மயூரா வருத்தப்படுகிறார். பின் கோபியின் போனை பார்த்து பாக்கியா கேள்வி கேட்கிறார். பின் ராமமூர்த்தி கோபியின் நடவடிக்கையை எச்சரிக்கை செய்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவை பற்றி கவலைப்பட மறுபக்கம் ராதிகா மயூராவிடம் நிலைமையை புரிய வைக்கிறார். நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என ராதிகா மயூரவிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது கோபி உருக்கமாக மெசேஜ் ஒன்றை அனுப்புகிறார். அதில் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது எத்தனை முறை தேடி வருகிறேன் ஆனால் ஏன் என்னை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய் நீயும் மயூராவும் இல்லை என்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என அனுப்புகிறார்.
அதை மயூரா கேட்டுவிட்டு கோபிக்கு பதில் அனுப்ப பார்க்கிறார். ஆனால் ராதிகா மயூராவை திட்டிவிட அது கோபிக்கு சென்றுவிடுகிறது. பின் கோபி போன் செய்ய ராதிகா போனை எடுக்கவில்லை. அப்போது கோபி போனை வைத்துவிட்டு பாத்ரூம் செல்கிறார். அந்த நேரம் பாக்கியா வந்து கோபியின் போனை எடுத்து பார்க்க அதில் R என எழுத்தில் போன் செய்தது இருக்கிறது. அப்போது கோபி வந்துவிட பாக்கியா என்ன செய்கிறாய் என கேட்கிறார்.
TN Job “FB Group” Join Now
இது யார் R என நம்பர் இருக்கிறது. எப்போது இந்த நம்பரில் போன் செய்தாலும் நீங்க டென்ஷன் ஆகுகிறீங்க என்ன ஆனது என கேட்கிறார். அப்போது கோபி அதெல்லாம் உனக்கு எதற்கு என கேட்க பாக்கியா எனக்கு உண்மை தெரிய வேண்டும் அந்த நம்பர் ஆம்பளையா பெண்ணா என கேட்கிறார். கோபி அதெல்லாம் உனக்கு தேவை இல்லாதது என சொல்லி சத்தம் போடுகிறார். பின் கீழே தாத்தா நன்றாக பேச தொடங்கிவிட்டார். அதை நினைத்து அனைவரும் சந்தோசப்படுகிறார்கள்.
கோபி அந்த பக்கம் செல்ல இனியா தாத்தா பேசுவதை கேளுங்க என சொல்கிறார். அப்போது தாத்தா கள்ளக்காதல் பற்றி பேச கோபி கோபப்படுகிறார். பின் தாத்தா கோபியை தனியாக சந்தித்து என் நிலைமைக்கு நீ தான் காரணம் என சொல்கிறார். அப்போது கோபி என்ன சொல்றீங்க என கேட்க எல்லாம் அதுவாக நடக்கும் என தான் நான் அமைதியாக இருந்தேன் என சொல்கிறார். கோபி கோவமாக பேச அப்போது எழில் வந்து சமாதானம் செய்கிறார்.
பின் பாக்கியா கோபிக்கு காபி கொடுக்கிறார். மறுபக்கம் ராதிகாவின் அண்ணன் உன் திருமண ஏற்பாடுகள் செய்யலாம் என தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வந்தேன் ஆனால் இவள் என்னென்னமோ பேசுகிறாய் என கேட்கிறார். நீ கோபியை திருமணம் செய்து கொண்டு இரு உன் வாழ்க்கையை பற்றி நல்ல முடிவை எடு என சொல்ல ராதிகா கோபியை திருமணம் செய்ய முடியாது என சொல்கிறார். ராதிகா நான் இங்கே இருந்தால் தான் எல்லா பிரச்சனையும் வரும் யாருக்கும் தெரியாதது போல நான் ஊரை விட்டு சென்றுவிடுகிறேன் என ராதிகா சொல்கிறார். ராதிகா என் அலுவலகத்தில் நான் பேசிவிட்டேன் துபாய் போக முடிவு செய்துவிட்டேன் என சொல்கிறார்.
அப்போது ராதிகாவின் அம்மா துபாயில் பிரச்சனை என இங்கே வந்தாய் இப்போது இங்கே பிரச்சனை என நினைத்து துபாய் போகிறாய் உனக்கு பெண்ணாக பிறந்ததால் மயூரா பாவம் என சொல்கிறார். அவளுடைய படிப்பு என்ன ஆகும் என கேட்க ராதிகா இது தான் சரியான முடிவு என சொல்கிறார். ராதிகாவின் அண்ணன் நீ எடுத்த முடிவு தவறு என சொல்ல ராதிகா நான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வேன் என சொல்கிறார். இதே மாதிரி உன்னுடன் எங்களால் இருக்க முடியாது என ராதிகாவின் அண்ணன் சொல்ல ராதிகா நீங்க கிளம்புங்கள் என சொல்கிறார். நான் மயூராவின் நல்லதுக்காக தான் செய்கிறேன் என ராதிகா சொல்கிறார்.