ராமமூர்த்திக்கு பணிவிடை செய்யும் பாக்கியா, புதிய போன் கோபிக்கு பரிசளித்த ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபிக்கு ராதிகா புதிய போன் வாங்கி கொடுக்க அதை நினைத்து கோபி மிகவும் சந்தோசப்படுகிறார். பின் ராமமூர்த்திக்கு இயற்கை உபாதைகளை கழிக்க பாக்கியா உதவி செய்ததை நினைத்து தாத்தா வருத்தப்படுகிறார். என் அப்பாவிற்கு நான் செய்ய மாட்டேனா என நினைத்து பாக்கியா வருத்தப்படுகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபிக்கு மயூரா கிப்ட் ஒன்றை கொண்டுவந்து கொடுக்கிறார். அப்போது கோபி அதை பார்த்து சந்தோசப்பட உங்களுக்கு தான் புது போன் என சொல்கிறார். கோபி அதை பார்த்து சந்தோசப்பட நான் இப்போதைக்கு இதை உபயோகப்படுத்தமாட்டேன் நீங்க கொடுத்தது புதிதாகவே இருக்கட்டும் என நினைக்கிறார். பின் தாத்தாவை பரிசோதனை செய்ய டாக்டர் வருவார் என ஜெனி பேசிக் கொண்டிருக்க அப்போது இனியா வந்து டாக்டரை தேடுகிறார். பின் டாக்டர் வந்துவிட தாத்தாவிற்கு சில உடற்பயிற்சிகளை சொல்லி கொடுக்கிறார்.
அதை ஆர்வத்துடன் பார்த்த இனியா இப்படி தான் செய்ய வேண்டுமா என கேட்கிறார். இனியா மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதை பார்த்து ஜெனிக்கு சந்தேகம் வருகிறது. பின் பாக்கியா அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்க, அப்போது நிறைய பேர் வந்து ஆர்டர் கொடுக்கின்றனர். செல்வி அதை எல்லாம் செய்து விடுவீர்களா என கேட்டதற்கு எல்லாம் கஷ்டப்பட்டு செய்ய தான் வேண்டும் என பாக்கியா சொல்கிறார். அப்போது கூட அலுவலகத்தில் வேலை செய்பவருக்கும் செல்விக்கும் இடையே சண்டை வருகிறது.
மறுபக்கம் தாத்தாவை செழியனும் ஜெனியும் பார்த்துக் கொண்டிருக்க பாக்கியா தாத்தாவிற்கு சாப்பாடு கொண்டு வருகிறார். அப்போது தாத்தாவிற்கு பாக்கியா ஊட்டிவிட தாத்தா முகத்தை அசைத்து எதோ சொல்ல வருகிறார். அப்போது ஈஸ்வரி அவருக்கு பாத்ரூம் வருகிறது போல என சொல்ல, உடனே ஜெனியை வெளியே அனுப்பிவிட்டு பாக்கியா தாத்தாவிற்கு எல்லாம் செய்கிறார். பின் பாக்கியாவை பார்த்து தாத்தா வருத்தப்படுகிறார். அதனால் அவர் அழ ஈஸ்வரி இவருக்கு இந்த நிலைமையா என நினைத்து அழுகிறார். பின் பாக்கியா என் அப்பாவிற்கு இப்படி நடந்தால் நான் சொல்லமாட்டேனா என சொல்லி ஆறுதல் சொல்கிறார்.