ராமமூர்த்தியை பார்க்க வந்த ராஜேஷ், விவாகரத்து பத்திரம் பற்றி கேட்ட ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், தாத்தா வெளியே வேடிக்கை பார்க்க வேண்டும் என சொல்ல, ராமமூர்த்தியை பார்க்க ராதிகாவின் கணவர் வருகிறார். அவர் ஒழுங்காக குடும்பத்தை கவனிக்க சொல்லுங்கள் என சொல்கிறார். பின் ராதிகா கோபியிடம் விவாகரத்து பத்திரம் பற்றி கேட்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தா வீட்டிற்கு வர தாத்தா பற்றி கேட்கின்றனர். பின் நிலா பாப்பாவை கொஞ்சிவிட்டு அவளுக்கு ஒரு பார்க் இருக்கிறது என சொல்கிறார். அங்கே சென்றால் நிலா பாப்பா ஜாலியாக விளையாடுவா என எழில் சொல்கிறார். பின் அமிர்தா பாட்டு பாடி நிலாவை தூங்க வைக்கிறார். அவர் பாடிய பாடல் மிகவும் அருமையாக இருக்க அதை கேட்டு அமிர்தாவின் அப்பா கூட தூங்குகிறார். பின் எழில் என்னுடைய படத்தில் நீங்க தான் அடுத்து பாட வேண்டும் என சொல்கிறார்.
மறுபக்கம் ஈஸ்வரி இங்கே வெயில் காலம் தொடங்கிவிட்டது அதனால் நம்ம ஊருக்கே போகலாம் என சொல்கிறார். ஆனால் பாக்கியா இங்கே தான் மருத்துவமனை வசதிகள் இருப்பதாக சொல்கிறார். அங்கே இருந்தால் சில மனிதர்களை பார்க்கலாம் என சொல்ல, பாக்கியா வெளியே வந்து தாத்தாவை அமர வைக்கிறார். அப்போது பாக்கியா மாடிக்கு வர ஈஸ்வரி தாத்தாவிற்கு காபி கொண்டுவர செல்கிறார். அப்போது ராதிகாவின் கணவர் ராஜேஷ் வருகிறார்.
அவர் உன் மகனை அடக்கி வைக்க மாட்டியா என சரமாரியாக கேள்வி கேட்கிறார். உன் மகனால் தான் என் மனைவி என்னை விவாகரத்து செய்தால் உன் மகனுக்கு தான் குடும்பம் இருக்கிறதே ஏன் என் குடும்பத்தை கெடுகிறான், என் மனைவியை கூட விடு என் மகளுக்கு நான் தான அப்பா அப்பறம் ஏன் என்னை இப்படி செய்கிறார் என கேட்கிறார். உடனே ஈஸ்வரியிடம் மாமாவை தனியாக விட்டுவிட்டாரா என கேட்க, அவர்கள் வரும் சத்தம் கேட்டு ராமமூர்த்தி கோவமாக சத்தம் போடுகிறார். அப்போது பாக்கியாவும் ஈஸ்வரியும் வந்து யார் நீ வெளியே போ என விரட்டுகின்றனர். ஆனால் ராஜேஷ் போகாமல் இருக்க தண்ணீ கேன் போடுபவர் வருகிறார்.
ராஜேஷ் அங்கிருந்து கிளம்ப அந்த ஆளை எங்கையோ பார்த்தது போல இருப்பதாக பாக்கியா சொல்கிறார். அன்னைக்கு நாம வீட்டில் வந்து பிரச்சனை செய்தவன் தான் என சொல்ல, ஈஸ்வரி ஆமாம் என சொல்கிறார். பின் கோபி ராதிகா வீட்டிற்கு வர மயூரா அன்று கேட்க பொம்மை வாங்கி வருகிறார். அப்போது கோபி தன்னுடைய பழைய போனில் போட்டோ எடுக்க புது போன் வாங்கி கொள்ளலாம் என மயூரா சொல்கிறார். பின் ராதிகா அந்த விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து வாங்கிட்டிங்களா என கேட்க கோபி அதிர்ச்சி அடைகிறார்.