மயூராவின் பிறந்தநாளை மறந்த கோபி, திடீரென வந்த ராஜேஷ் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
மயூராவின் பிறந்தநாளை மறந்த கோபி, திடீரென வந்த ராஜேஷ் - இன்றைய
மயூராவின் பிறந்தநாளை மறந்த கோபி, திடீரென வந்த ராஜேஷ் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
மயூராவின் பிறந்தநாளை மறந்த கோபி, திடீரென வந்த ராஜேஷ் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் மயூராவின் பிறந்தநாள் விழா நடைபெற இருக்கிறது. அதில் கோபி வர வேண்டும் என மயூ காத்துக் கொண்டிருக்கிறார். அதன் பின் ராஜேஷ் திடீரென வருவதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூராவிற்கு பிறந்தநாள் பார்ட்டியை ராதிகா ஏற்பாடு செய்கின்றார். அப்போது மயூரா கோபி அங்கிள் இன்னும் வரவில்லை என நினைத்து வருத்தப்பட அங்கிள் சீக்கிரமாக வருவார் என ராதிகா சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா மசால் பொடிகளை கொண்டு சென்று செல்வியை கொடுக்க சொல்ல, தனியாக போக முடியாது என்பதால் ஜெனி நானும் போறேன் என சொல்கிறார். அப்போது இனியா வந்து எனக்கு பசிப்பதாக சொல்ல, ஜெனி நான் வெளியே போகிறேன் உனக்கு எதாவது வேண்டுமா என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

 

ஆமாம் வேண்டும் என சொல்ல, பாக்கியா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பின் அந்த டாக்டர் வரவில்லையா என கேட்க, உனக்கு எதற்கு என பாக்கியா கேட்கிறார். தாத்தா அப்போ தான சீக்கிரம் சரியாக வேண்டாமா என கேட்க, அதெல்லாம் அப்பா பார்த்துக் கொள்வார் நீ படிக்கும் வேலையை பாரு என சொல்கிறார். மயூரா கோபி வருவதற்காக காத்துக் கொண்டிருக்க நீண்ட நேரம் ஆகிவிட்டது என்பதால் கேக் வெட்ட சொல்கின்றனர். ஆனால் மயூரா கோபி அங்கிள் வந்தால் தான் நான் கேக் வெட்டுவேன் என சொல்ல, கோபிக்கு போன் செய்கிறார்.

கோபி மயூராவின் பிறந்தநாளை மறந்துவிட, அங்கே தான் வந்து கொண்டிருக்கிறேன் என சொல்கிறார். பின் கோபி வர மயூரா சந்தோசமாக கேக் வெட்டுகிறார். அதை முதலில் கோபிக்கு தான் ஊட்டி விட கோபி வாங்கி கொண்டு வந்த பொம்மையை கொடுக்கிறார். அது மயூரா சொன்ன பொம்மை இல்லை என்பதால் மயூரா வருத்தமாக இருக்கிறார். பின் கோபிக்கு மயூரா நைல் பாலிஸ் வைக்க வேண்டாம் என கோபி சொல்கிறார். அப்போது ராஜேஷ் அங்கே வருகிறார். அவரை பார்த்து குடும்பமே அதிர்ச்சி அடைய, ராஜேஷ் பொம்மை வாங்கி கொண்டு வருகிறார். மயூரா அதை எனக்கு வேண்டாம் என சொல்ல, என் மகளுக்கு பொம்மை வாங்க நீங்க யாரு என கேட்கிறார்.

சரக்குகளை காப்பாற்ற கஷ்டப்படும் கதிர், உண்மையை சொல்ல ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அவர் தான் ராதிகாவை திருமணம் செய்ய போகிறார். இனிமேல் எல்லாம் அவரே பார்த்துக் கொள்வார் என ராதிகாவின் அம்மா சொல்கிறார். இவரா இவரை கல்யாணம் செய்ய தான் என்னை வேகமாக விவாகரத்து செய்தார்களா என சொல்கிறார். பின் நீங்க கிளம்புங்கள் என சொல்ல, கோபி மீண்டும் போலீஸ் வர வைக்க வேண்டுமா என கேட்கிறார். வேண்டாம் என் பெண்ணிற்கு ஒரு பொம்மை கூட வாங்கி கொடுக்க முடியவில்லை என சொல்ல, ராதிகா எதுவும் வேண்டாம் என கிளம்ப சொல்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என கோபி பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!