விவாகரத்து வாங்கிய ராதிகா, அப்பாவிற்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்யும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
விவாகரத்து வாங்கிய ராதிகா, அப்பாவிற்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்யும் கோபி - இன்றைய
விவாகரத்து வாங்கிய ராதிகா, அப்பாவிற்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்யும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
விவாகரத்து வாங்கிய ராதிகா, அப்பாவிற்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்யும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா வீட்டிற்கு நீண்ட நாளுக்கு பின் வருகிறார். அப்போது ராதிகா தனது விவாகரத்து கிடைத்துவிட்டது என சொல்கிறார். பின் கோபி அப்பாவின் உடல்நிலையை நினைத்து வருத்தப்படுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி நீண்ட நாளுக்கு பின் ராதிகா வீட்டிற்கு வருகிறார். மயூரா ஏன் இத்தனை நாட்களாக என்னை பார்க்க வரவில்லை என மயூரா கேள்வி கேட்கிறார். அப்போது கோபி எனக்கு மிகவும் காய்ச்சல் அதனால் தான் வரவில்லை என சொல்ல, எனக்கு இந்த வாரம் பிறந்தநாள் வருவதாக சொல்ல கோபி உனக்கு என்ன வேண்டும் என கேட்கிறார். எனக்கு பொம்மை போதும் என சொல்ல கோபி எதாவது பெரிய பரிசு கேளு என சொல்கிறார். எனக்கு இதுவே போதும் என மயூரா சொல்கிறார். பின் ராதிகா என்னுடைய விவாகரத்து கேஸ் நேற்று விசாரணைக்கு வந்தது என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது கோபி ஆமாம் நான் மறந்துட்டேன் என சொல்ல, எனக்கு விவாகரத்து கிடைத்துவிட்டது. இனிமேல் எனக்கும் ராஜேஷ்க்கும் எந்த உறவும் இல்லை நீங்களும் எங்களுடன் வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என ராதிகா சொல்கிறார். பின் கோபி நான் சீக்கிரம் வந்துருவேன் உன்னுடைய சந்தோசம் தான் முக்கியம் என சொல்கிறார். பின் தாத்தாவை சந்தோசப்படுத்த அனைவரும் அவர் முன்னாள் விளையாடி இருக்கின்றனர். அப்போ தாத்தாவிற்கு கால் வலிக்க அவரை கூட்டி சென்று படுக்க வைக்கிறார்கள். ஈஸ்வரி தாத்தாவை அமர வைக்க ஒரு வண்டி வாங்கலாம் என சொல்ல, செழியன் அது மிகவும் காசு கூட என சொல்கிறார்.

அதை கேட்டு ஈஸ்வரி வருத்தப்பட, பாக்கியா அவன் இருக்கான் நான் வாங்கி தருகிறேன் என சொல்கிறார். பின் பாக்கியா எழிலிடம் தாத்தாவிற்கு ஒரு சேர் வாங்கலாம் என சொல்கிறார். தாத்தா இப்படி இருக்கிற ஆளே இல்லை. என சொல்லி வருத்தப்பட எழில் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். என்னுடைய எல்லா கஸ்டங்களிலும் தாத்தா தான் இருந்தார் என சொல்ல, நான் வீல் சேர் வாங்கி கொடுக்கிறேன் என சொல்கிறார். அப்போது கோபி வீல் சேருடன் வருகிறார்.

எழில் தாத்தாவிற்கா என கேட்க, ஆமாம் என கோபி சொல்கிறார். ஜெனி அப்போது வர தாத்தா என்ன செய்கிறார் என பாக்கியா கேட்கிறார். தாத்தா இன்னைக்கு பேசியதாக சொல்ல கோபி என்ன பேசினார் என பதட்டம் அடைகிறார். பின் இனியா பெயரை சொன்னதாக சொல்ல, தாத்தாவை நினைத்து எப்படி அப்பா வருத்தப்படுகிறார் என பாக்கியா சொல்கிறார். ஆனால் அப்பாவை பார்த்து தாத்தா கோபப்படுகிறார் அதை நீ கவனித்தாயா என கேட்க, பாக்கியா அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார்.

மீனா அப்பாவிடம் உதவி கேட்ட ஜீவா, கோவத்தில் பூட்டை உடைக்க சென்ற கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் தாத்தாவை சேரில் உட்காரவைத்து ரோட்டில் கூட்டிச் செல்கின்றனர். அதை பார்த்து கோபி சந்தோசப்படுகிறார். மறுநாள் ஜெனி கோபிக்கு காபி கொடுக்க, பாக்கியா எங்கே என கேட்கிறார். அவங்க தாத்தாவை பார்த்துக் கொண்டு இருப்பதாக சொல்ல, கோபி ஜெனி காபியை குடித்து பார்த்து நல்ல இல்லாமல் இருக்கிறார். அப்பா இரவெல்லாம் நன்றாக தூங்கினாரா என கேட்க, அப்பா படுக்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டதாக சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!