பாக்கியாவிற்கு நன்றி சொல்லும் ஈஸ்வரி, அமிர்தா குடும்பத்திடம் தாத்தா பற்றி சொன்ன எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி ராமமூர்த்திக்கு முடியாமல் போனதை நினைத்து வருத்தப்படுகிறார். எழில் அமிர்தா வீட்டிற்கு சென்று தாத்தா பற்றி சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி கட்டில் வாங்கி கொடுத்து அதை வாசலில் நின்று பார்த்துக் கொள்கிறார். அப்போது செழியன் வந்து எவ்வளவு இந்த கட்டில் என கேட்க, 50 ஆயிரம் ரூபாய் என சொல்கிறார். இவ்வளவு காசு கொடுத்து ஏன் வாங்க வேண்டும் என கேட்க, நீ மட்டும் பெரிய கட்டிலில் வசதியாக படுக்கிறாய் தாத்தா மட்டும் கஷ்டப்பட வேண்டுமா என கேட்கிறார். பின் கோபி பாக்கியாவிடம் காபி கேட்க அதற்குள் கோபிக்கு போன் வந்து கிளம்புகிறார். பின் ஈஸ்வரி சரியாக சாப்பிடாமல் இருக்க பாக்கியா சாப்பிட சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
ஆனால் ஈஸ்வரி உன் மாமா எனக்கு முடியாத போது எப்படி பார்த்துக் கொண்டார். ஆனால் நான் அவரை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என சொல்லி அழுகிறார். அப்போது பாக்கியா அத்தை அழாதீர்கள் நீங்களும் மாமாவும் எவ்வளவு பாசம் வைத்திருக்கீங்க என எனக்கு தெரியும், என் குழந்தைகளிடம் உங்களை போல தான் இருக்க வேண்டும் என சொல்லி நான் வளர்க்கிறேன் என சொல்கிறார். அதை கேட்டு ஈஸ்வரி வருத்தப்பட்டு நீ இல்லை என்றால் எங்க நிலைமை மோசமாகிவிடும், நீ தான் எங்களை வழிநடத்தி சென்று இருக்கிறாய் என கேட்கிறார்.
அலுவலரால் உதாசீனப்படுத்தப்பட்ட கதிர் ஜீவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறக்கப்படுமா? இன்றைய எபிசோட்!
பின் எழில் அமிர்தா வீட்டிற்கு சென்று இருக்கிறார். தாத்தா பற்றி சொல்கிறார். தாத்தா ரொம்ப நல்ல மனிதர் அவருக்கு இப்படி நிலைமையா என நினைத்து வருத்தப்படுகிறார்கள் அமிர்தா குடும்பத்தினர். பின் கோபிக்கு ராதிகா போன் செய்து ஏன் உடம்பு சரி இல்லையா என கேட்கிறார். ஆமாம் என கோபி சொல்ல, ராதிகா வீட்டிற்கு தான் போவதாக சொல்கிறார். மறுபக்கம் இனியா நன்றாக தேர்வு எழுதி இருப்பதாக சொல்ல தாத்தா அதை கேட்டு சந்தோசமாக இருக்கிறார். இனியா இனிமேல் நான் படிக்கமாட்டேன் என சொல்ல, தாத்தா கோபப்படுகிறார். அப்போது ஈஸ்வரி அதெல்லாம் இனியா படித்து கலெக்டர் ஆகிவிடுவாள் என சொல்கிறார்.