பாக்கியாவிடம் பிரச்சனையை சொன்ன இனியா, தற்கொலைக்கு முயற்சி செய்த நிகிலா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பாக்கியாவிடம் பிரச்சனையை சொன்ன இனியா, தற்கொலைக்கு முயற்சி செய்த நிகிலா - இன்றைய
பாக்கியாவிடம் பிரச்சனையை சொன்ன இனியா, தற்கொலைக்கு முயற்சி செய்த நிகிலா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பாக்கியாவிடம் பிரச்சனையை சொன்ன இனியா, தற்கொலைக்கு முயற்சி செய்த நிகிலா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இனியா தன்னுடைய தோழிக்கு ஸ்கூலில் நடந்தது பற்றி பாக்கியாவிடம் சொல்லி வருத்தப்பட்டு அழுகிறார். பின் நிகிலா தற்கொலை முயற்சி செய்து கொண்டதை கேட்டு இனியா பதறி அழுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா நிகிலாவை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, பாக்கியா வந்து என்ன நடந்தது என கேட்கிறார். அப்போது நிகிலாவிற்கு ஸ்கூலில் சார் ஒருவர் தொந்தரவு செய்கிறார். நிகிலாவால் என்ன செய்வது என தெரியவில்லை. நான் சாக போறேன் என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என சொல்லி அழ, பாக்கியா இனியாவை சமாதானம் செய்துவிட்டு நாளைக்கு நான் ஸ்கூலில் வந்து கேட்கிறேன்.

வீட்டை விட்டு வெளியேறிய லட்சுமி, பாரதியிடம் பூஜைக்கு வர சொல்லும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

நிகிலா மட்டும் இப்படி கஷ்டப்பட வேண்டும் அந்த சார் நன்றாக இருப்பானா என கேட்கிறார். நிகிலா எதுவும் செய்து கொள்ள கூடாது என இனியா அழுது கொண்டே இருக்க, பாக்கியா அவளை தூங்க சொல்கிறார். இனியா தூங்கிவிட இது பற்றி அவரிடமும் எழிலிடமும் சொல்ல வேண்டும் என பாக்கியா நினைக்கிறார். அவர் எழுந்து கோபி ரூமிற்கு வந்து பார்க்க அங்கே கோபி தூங்கி கொண்டிருக்கிறார். பின் எழிலை பார்க்க வர அவனும் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

அதனால் காலையில் இது பற்றி சொல்லி முடிவுகட்ட வேண்டும் என பாக்கியா நினைக்கிறார். மறுநாள் பாக்கியா அதே நினைத்து கொண்டிருக்க ஜெனி வந்து இனியா இன்னும் எந்திரிக்கவில்லையா என கேட்கிறார். இல்லை அவள் இரவு நேரமாகி தான் தூங்கினால் என பாக்கியா சொல்ல செல்வி ஏற்கனவே நடந்த நிகழ்வு ஒன்றை சொல்கிறார். அவங்களுக்கு தெரிந்த பெண் ஒருத்தி வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டதாக சொல்ல, பின் ஆசிரியர் எதோ சொன்னதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கண்டுபிடித்தார்கள்.

கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு தங்களுடைய ரூமை கொடுத்த தனம், நைட்டி பிரச்சனையால் கடுப்பான மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இதை கேட்டதும் பாக்கியாவிற்கு வருமாகிவிட இனியாவை மேலே சென்று பார்க்கிறேன் என பாக்கியா கிளம்புகிறார். அந்த நேரம் இனியா அம்மா அம்மா என கத்த குடும்பத்தினர் அனைவரும் பதறி போய் வருகின்றனர். பாக்கியா நிகிலாவிற்கு எதுவும் இல்லையே என கேட்க, அம்மா நிகிலா தூக்கு மாட்டிக் கொண்டாள் என இனியா அழுது கொண்டே சொல்கிறார். பின் தாத்தா இந்த வயதில் என்ன அவளோ பெரிய பிரச்சனை என கேட்க, இனியா என்னை கூட்டி சென்று நிகிலாவை பார்க்க வை என சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!