எழில் மீதும் வெறுப்பை காட்டும் அமிர்தா, ஒரே நாளில் பிரபலமானதை நினைத்து சந்தோசப்படும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தா வீட்டிற்கு செல்ல அமிர்தா அவர் மீது கோவமாக இருப்பது போல நடந்து கொள்கிறார். பின் பாக்கியா செழியன் திருந்தியதை நினைத்து சந்தோசமாக இருக்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தா வீட்டிற்கு செல்ல அவர் ரூமை விட்டு வெளியே வராமல் அவாய்ட் செய்கிறார். அமிர்தா அப்பா அம்மா கூப்பிட்டதும் கோவமாக வந்த அமிர்தா சரியாக பேசாமல் செல்கிறார். உங்க இருவருக்கும் எதாவது பிரச்சனையா என அமிர்தா அப்பா கேட்க இல்லை என சொல்கிறார். பின் பாக்கியா ஈஸ்வரி மற்றும் தாத்தாவிற்கு காபி கொடுக்க அப்போது வந்த செழியன் ஜெனியை அழைத்து கொண்டு படத்திற்கு செல்வதாக சொல்கிறார்.
இத்தனை நாட்களாக நான் எங்கேயும் கூட்டி போகவில்லை என சொன்னாய் இப்போது பார்த்தியா என செழியன் சொல்ல, உண்மையாகவே செழியன் திருந்திவிட்டான் அவனை நினைத்து எனக்கு கவலையே இல்லை என பாக்கியா சொல்கிறார். பின் அமிர்தா நடந்து கொண்டதை நினைத்து எழில் வருத்தமாக இருக்க அப்போது வந்த சதீஸ் எழிலை பார்த்து அந்த வேலை இருந்தது அதை செய்தாயா என கேட்கிறார். இல்லை என போன் செய்து பார்த்து நம்பர் பிசியாக இருக்கிறது.
அதனால் சதீஸ் எழில் அமிர்தாவை நினைத்து வருத்தப்படுவதை பார்த்து கோபப்படுகிறார். உனக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் நிறைய சமூக சேவைகள் இருக்கிறது அதை பண்ணு தேவை இல்லாத வேலை எல்லாம் செய்யாதே என சொல்கிறார். பின் பாக்கியா பேஸ்புக் எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் இருக்க இனியா கிண்டல் செய்கிறார். பின் பாக்கியா விளம்பரத்தை நிறைய பேர் பார்த்ததை எழில் சொல்ல, பாக்கியா ஆச்சர்யப்படுகிறார். பாக்கியா அதை எல்லாம் கேட்டு மிகவும் சந்தோசமாக இருக்கிறார்.
ஜெனி என் அம்மா அப்பாவிற்கு அனுப்பினேன் எல்லாரும் நன்றாக இருக்கிறது என சொன்னதாக சொல்ல, ஒரே நாளில் நான் இவ்வளவு பிரபலமாகிவிட்டேன் என பாக்கியா சந்தோசமாக இருக்கிறார். இதை கொண்டாட நான் ஸ்வீட் செய்கிறேன் என சொல்ல, மீண்டும் எழில் அமிர்தாவை நினைத்து வருத்தப்படுகிறார். பாக்கியா தூங்கி கொண்டிருக்க எழுந்து போனை பார்க்கிறார். அப்போது அவரது வீடியோவிற்கு லைக் வர இனியாவை எழுப்பி காட்டுகிறார்.
இனியா வேகமாக எழுந்து என்னாச்சு என கேட்க, இதோ பாரு வீடியோவிற்கு லைக் என காட்டுகிறார். பாக்கியா எழில் பேஜ் மட்டும் லைக் வந்தது என்னுடைய பக்கத்தை யாருமே லைக் செய்யவில்லை என சொன்னேன்ல இப்போ ஒருவர் செய்திருக்கார் என சொல்ல, அது பக்கத்துக்கு வீட்டு ஆண்டி என இனியா சொல்கிறார். பாக்கியா லைக் வந்ததை நினைத்து சந்தோசமாக இருக்க இனியா மீண்டும் கோவப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.