பாக்கியாவை ரெஸ்ட் எடுக்க சொல்லும் டாக்டர், கண்டுக்கொள்ளாமல் இருக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
பாக்கியாவை ரெஸ்ட் எடுக்க சொல்லும் டாக்டர், கண்டுக்கொள்ளாமல் இருக்கும் கோபி - இன்றைய
பாக்கியாவை ரெஸ்ட் எடுக்க சொல்லும் டாக்டர், கண்டுக்கொள்ளாமல் இருக்கும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
பாக்கியாவை ரெஸ்ட் எடுக்க சொல்லும் டாக்டர், கண்டுக்கொள்ளாமல் இருக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியும் பாக்கியாவும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கே பாக்கியா கால் சரியாகவில்லை நன்றாக ரெஸ்ட் எடுக்க வேண்டும் இல்லையென்றால் ரிஸ்க் ஆகிவிடும் என டாக்டர் சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி தனது அம்மா அப்பாவிடம் மருத்துவமனைக்கு செல்வதாக சொல்ல பாக்கியாவும் இன்று மருத்துவமனைக்கு போக வேண்டும். அதனால் இருவரும் மருத்துவமனைக்கு போய்விட்டு வாங்க என்று கோபியின் அப்பா சொல்கிறார். கோபி என்ன செய்வதென்று தெரியாமல் சரி என்று சொல்கிறார். மருத்துவமனைக்கு சென்று கோபி டாக்டரிடம் காண்பிக்க சிறிய காயம் தான் எதுவும் செய்யாது என டாக்டர் சொல்கிறார்.

மருத்துவமனைக்கு செல்லும் தனம் மூர்த்தி, மளிகை பொருள்கள் அனுப்ப சொல்லும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

பின்னர் பாக்கியாவை செக் செய்து பார்க்க கோபி முக்கியமான போன் வந்துள்ளது என சென்றுவிடுகிறார். பாக்கியா காலை பார்த்து இன்னும் சரியாகவில்லை என திட்டுகிறார். இன்னும் ரெஸ்ட் எடுக்காமல் இருந்தால் கால் ரொம்ப மோசமாக போய்விடும் என சொல்கிறார். இதெல்லாம் கேட்காமல் ராதிகாவிடம் போன் செய்து கோபி சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் டாக்டர் கண்டிப்பாக ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்கிறார்.

பின்னர் வீட்டிற்கு வந்ததும் கோபியை மட்டும் நலம் விசாரிப்பதை பார்த்து பாக்கியா வருத்தப்படுகிறார். பின்னர் எழில் வீட்டிற்கு வந்து பாக்கியாவிடம் டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்கிறார். ஆனால் பாக்கியா எதுவும் சொல்லாமல் இருக்கிறார். மீண்டும் மீண்டும் கேட்க ரெஸ்ட் எடுக்க சொன்னதாக சொல்கிறார். அதன் பின்னர் உன் அப்பா மருத்துவமனைக்கு வந்து என்னை டாக்டர் பார்க்கும் போது போன் பேச போய்ட்டாரு அதன் பின்னர் வந்து ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என சொல்லி வருத்தப்படுகிறார்.

அஞ்சலி வளைகாப்பிற்கு கண்ணம்மாவை அழைக்க சொல்லும் சண்முகம் – பாரதியின் முடிவு என்ன? இன்றைய எபிசோட்!

செல்வியும், ஜெனியும் பாக்கியாவிற்கு ஆறுதல் சொல்கிறார். பின்னர் பாக்கியாவிற்கு போன் வருகிறது. முன்னதாக சாப்பாடு கொடுத்த நபர் போன் செய்கிறார். என்னாச்சு 2 நாள் சாப்பாடு கொடுத்தீங்க அப்பறம் ஏன் வரவில்லை என்று கேட்கிறார். என் காலில் அடி பட்டுள்ளது என்று சொல்ல, இதான் புதிதாக தொழில் தொடங்கியவர்களை நம்ப முடியாது என சத்தம் போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!