வேலைக்கு செல்ல போவதாக செழியனிடம் சொல்லும் ஜெனி, ராதிகாவிடம் வருத்தமாக பேசி நடிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
வேலைக்கு செல்ல போவதாக செழியனிடம் சொல்லும் ஜெனி, ராதிகாவிடம் வருத்தமாக பேசி நடிக்கும் கோபி - இன்றைய
வேலைக்கு செல்ல போவதாக செழியனிடம் சொல்லும் ஜெனி, ராதிகாவிடம் வருத்தமாக பேசி நடிக்கும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
வேலைக்கு செல்ல போவதாக செழியனிடம் சொல்லும் ஜெனி, ராதிகாவிடம் வருத்தமாக பேசி நடிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், உடல்நிலை சரியாகி செல்வி வீட்டிற்கு வருகிறார். அவரிடம் ஜெனி மற்றும் செழியனும் எல்லா வேலைகளை செய்ததை சொல்கிறார். பின்னர் ஜெனி வேலைக்கு போகட்டுமா என செழியனிடம் கேட்கிறார். நான் உங்க அம்மா மாதிரி மாறிடுவேனா என்று பயமாக இருக்கிறது என ஜெனி சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பாக்கியா டீ கொண்டு வந்து தருகிறார். அப்போது கோபி கொஞ்ச நேரம் பேச விட மாட்டேங்கிறார் என நினைத்து அவரை அனுப்புகிறார். பின்னர் எழில் பாக்கியாவை மருத்துவமனை அழைத்து செல்ல கேட்கிறார். ஆனால் பாக்கியா வராமல் தடுக்கிறார். அப்போது அங்கே செல்வி வருகிறார். உடல்நிலை சரியானதா என்று கேட்க அதெல்லாம் நான் நன்றாக ரெஸ்ட் எடுத்துவிட்டேன் என சொல்கிறார்.

என் புருஷன் குடிச்சாலும் நன்றாக பார்த்துக் கொண்டார், நான் ஒரு வேலையும் பார்க்கவில்லை என சொல்கிறார். உடனே ஜெனி இங்கே எல்லாம் தலைகீழே நடந்தது. நம்ம முன்னாடி தான் டாக்டர் ஆன்டியை ரெஸ்ட் எடுக்க சொன்னாரு ஆனால் ஆன்டி எல்லா வேலைகளையும் செய்தார் என சொல்கிறார். அதான் தெரியுமே இந்த வீட்டில் ரெஸ்ட் இருக்காது என சொல்ல, கோபி விழுந்ததையும் சொல்கிறார். அவர் நன்றாக ரெஸ்ட் எடுக்கிறார் ஒன்னும் பிரச்சனை இல்லை என சொல்ல செல்வி வேலையை பார்க்க செல்கிறார்.

வீட்டிற்கு பொருள்கள் வாங்கும் கண்ணன் ஐஸ்வர்யா, ரோட்டில் இருவரையும் பார்த்து வருத்தப்படும் மூர்த்தி தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

பின்னர் ஜெனி எழிலிடம் என்று தான் வேலைக்கு செல்ல இருப்பதாக கூறுகிறார். இத்தனை நாள் நான் சொல்லும்போது கேட்காமல் இப்போ என்னாச்சு என்று கேட்க, அம்மா வந்து வேலைக்கு போக சொன்னாங்க, அதுமட்டுமில்லாமல் நானும் உங்க அம்மா மாதிரி ஆயிடுவேனோ என்று பயமாக இருக்கிறது என ஜெனி சொல்கிறார். உடனே செழியன் சரி நானே நல்ல வேலை பார்க்கிறேன் என்று சொல்கிறார்.

எழில் அமிர்தாவை ஊருக்கு அனுப்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார். பின்னர் காரில் ஏற்றிவிட்டு அவர்களை அனுப்புகிறார். எப்போது வருவீங்க என்று அமிர்தாவிடம் எழில் கேட்க ஒரு வாரத்தில் வந்துவிடுவோம் என சொல்கிறார். பின்னர் அமிர்தா காரில் ஏறி செல்ல எழிலிற்கு ஒரு மாதிரி ஆகிறது. அமிர்தாவும் பிரிந்து செல்ல மனமில்லாமல் செல்கிறார். பின்னர் எழில் அங்கிருந்து கிளம்புகிறார்.

லட்சுமி நினைப்பாக இருக்கும் கண்ணம்மா, விஷ மாத்திரைகளை சாப்பிடும் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

கோபி ராதிகாவின் போட்டோவை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். பின்னர் ராதிகாவுக்கு போன் செய்கிறார். கோர்ட்டுக்கு இன்று போகவேண்டுமே நான் உடல்நிலை சரியானதும் நான் வருகிறேன் என்று கோபி சொல்ல, இந்த நிலைமையில் கோர்ட்டிற்கு நான் வர சொல்வேனா என ராதிகா சொல்கிறார். நான் உங்களுக்காக தான் வாழ்கிறேன் என கோபி சொல்ல, நிச்சயமாக ராஜேஷ் விவாகரத்து கொடுத்திருவார் என கோபி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!