ஜெனி வீட்டிற்கு சென்று உண்மையை தெரிந்து கொள்ளும் பாக்கியா, செழியனை சரமாரியாக திட்டுகிறார் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று, ஜெனிக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு பாக்கியா அவள் வீட்டிற்கு செல்கிறார். அங்கே செழியன் திட்டுவதாக ஜெனி பாக்கியாவிடம் சொல்லி அழுகிறார். பாக்கியா செழியனிடம் வந்து ஜெனியை ஏன் இப்படி செய்கிறார் என திட்டிவிடுகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனிக்கு எதோ பிரச்சனை என செல்வியும் பாக்கியாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என ஜெனி வீட்டிற்கு செல்கிறார். அங்கே ஜெனி பாக்கியாவிடம் செழியன் குறித்து சொல்லி அழுகிறார். பாட்டி குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என திட்டுகிறார். ஆனால் இதுகுறித்து செழியனிடம் கேட்டால் அவன் என்னை திட்டுகிறார்.
என்னை செழியன் பேசவே விடவில்லை. நான் பேசுனாலே அவன் என்ன திட்டுகிறார் என்று ஜெனி அழுகிறார். உடனே பாக்கியா ஆறுதல் சொல்லிவிட்டு செழியன் வந்து உன்னை கூட்டிட்டு போவான் என அங்கிருந்து கிளம்புகிறார். பின்னர் வீட்டில் செழியன் வேலை செய்து கொண்டிருக்க பாக்கியா வருகிறார். ஜெனியை என்ன செய்தாய் அவள் ஏன் அவளது வீட்டிற்கு போனால் என்று கேட்கிறார்.
அவளுக்கு அம்மா அப்பா கூட இருக்கனும் என்று ஆசை அதன் போயிருக்கா என்று செழியன் சொல்ல, பாக்கியா பயங்கரமாக செழியனை திட்டுகிறார். அவளை வைத்து வாழ முடியவில்லை என்றால் எதற்கு கல்யாணம் செய்ற என்று கேட்கிறார்.பாட்டி குழந்தை பற்றி கேட்டதால் தான் உன்னிடம் அவள் பேசினால் என்று விளக்கமாக சொல்கிறார்.
நீயே சென்று அவளை கூட்டிட்டு வந்து ஒழுங்காக வாழ வேண்டும். இதை தவிர நீ 24 வயதில் ப்ரோமோஷன் வாங்குறது எல்லாம் தேவையில்லாதது என்று சொல்கிறார். நீ பண்ண தவறுகளை நினைத்து பார்த்து சீக்கிரத்தில் அவளை கூட்டிட்டு வரணும். இதற்கு மேல் இதை பற்றி நான் எதுவும் பேசமாட்டேன் என்று பாக்கியா அங்கிருந்து கிளம்ப, செழியன் யோசித்து பார்க்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!