கோபி படத்திற்கு வராததை நினைத்து கோவப்படும் ஈஸ்வரி, எழில் சொன்னதை சொல்லும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி படத்திற்கு வராதது பற்றி கோபியிடம் ஈஸ்வரி கேட்க அப்போது கோபி எழில் வரக்கூடாது என சொன்னதை சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா எழில் மீது கோபப்படுகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் படம் நன்றாக இருந்ததாக பாக்கியா பேசிக் கொண்டிருக்க, ஜெனியும் படம் நன்றாக இருந்ததாக சொல்கிறார். செழியன் என்ன சொன்னான் என கேட்க அவனும் நன்றாக இருப்பதாக சொன்னான் முதல் படம் வெற்றி அடைய போகிறது. அதனால் நிச்சயம் நீ பெரிய ஆள வர போகிறான் என ஜெனி சொல்கிறார். அப்பா வராதது தான் வருத்தமாக இருக்கிறது என சொல்ல, அப்பாவை நீ கூப்பிட்டியா இல்லையா 2 மணி நேரம் தான அவரால் நேரம் ஒதுக்க முடியாதா என கேட்கிறார். பின் ஈஸ்வரி வர அவரும் படத்தை பற்றி பேசுகிறார்
TN Job “FB Group” Join Now
பின் கோபி வீட்டில் எந்த ஒரு விசேஷம் இருந்தாலும் அவன் கலந்து கொள்ளாமல் இருக்கிறான் என சொல்ல, இதை நான் சும்மா விட போவதில்லை என சொல்கிறார். பின் பாக்கியாவை உட்கார வைத்து எழில் சாப்பாடு பரிமாற மீண்டும் செழியன் படம் நன்றாக இருப்பதாக சொல்கிறார். பின் கோபி வரவில்லையா என கேட்க, அப்போது கோபி வருகிறார். அப்போது கோபியிடம் இனியா அண்ணன் படம் இன்று வந்தது எப்படி இருக்கிறது என கேட்காமல் போறீங்க என கேட்கிறார். அப்போது கோபி யாரும் என்னிடம் வந்து படம் பார்க்க வர சொல்லவில்லை என சொல்கிரார்.
அப்போது கோபி என்னிடம் வந்து அங்கே வந்து விடாதீங்க என சொன்னதாக சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா நம்பாமல் இருக்க உன் அருகே தான உன் பையன் இருக்கிறான் கேளு என சொல்கிறார். பின் என் பையன் படம் எடுத்ததை நினைத்து சந்தோசமாக இருந்தது ஆனால் அவன் என்னை வர வேண்டாம் என சொன்ன பின்னால் நான் எப்படி போவது என கேட்கிறார். பாக்கியா அதை கேட்டு எழில் மீது கோபப்படுகிறார். பாக்கியா எழில் ஏன் இப்படி செய்தாய் என கேட்க அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை அப்படி எல்லாம் சொல்லலாமா என ஈஸ்வரி கேட்க தாத்தாவை கூப்பிட வேண்டும் என சொல்கிறார். பின் அமிர்தா போன் செய்ய எழில் வீட்டில் எல்லாரும் சந்தோசமாக இருந்ததாக சொல்கிறார்.
அமிர்தா நல்ல படம் என சொல்ல நிலா பாப்பா கூட நன்றாக படம் பார்த்ததாக சொல்கிறார். பின் என் வாழ்க்கையில் எல்லா சந்தோஷத்திலும் இனி நீங்களும் நிலா பாப்பாவும் இருக்க வேண்டும் என சொல்ல அமிர்தா போனை வைக்கிறார். பாக்கியா கோபியிடம் வந்து அவன் சொன்னாலும் நீங்க வந்திருக்கலாம் என சொல்கிறார். இன்னும் எழில் இப்படி சொல்லிருப்பான் என நான் நினைக்கவே இல்லை என சொல்கிறார். எழில் படம் எடுத்ததை நினைத்து நான் சந்தோசமாக தான் இருந்தேன் அவன் படம் தியேட்டரில் வரும் அப்போது யாரும் படம் பார்க்க முடியாது என சொல்ல முடியாது என சொல்கிறார். பின் எழில் வர வேண்டாம் என சொன்னதை நினைத்து வருத்தப்பட்டு பாக்கியாவிடம் பேசுகிறார்.