பாக்கியாவிடம் எழில் பற்றி பெருமையாக சொல்லும் குடும்பத்தினர், ஜெனி மனதை மாற்றும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
பாக்கியாவிடம் எழில் பற்றி பெருமையாக சொல்லும் குடும்பத்தினர், ஜெனி மனதை மாற்றும் செழியன் - இன்றைய
பாக்கியாவிடம் எழில் பற்றி பெருமையாக சொல்லும் குடும்பத்தினர், ஜெனி மனதை மாற்றும் செழியன் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
பாக்கியாவிடம் எழில் பற்றி பெருமையாக சொல்லும் குடும்பத்தினர், ஜெனி மனதை மாற்றும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், அமிர்தா வீட்டிற்கு வந்த பாக்கியா அமிர்தா தான் நான் தொழில் தொடங்க காரணம் என சொல்கிறார். எழில் பற்றி அமிர்தா குடும்பத்தினர் புகழ்ந்து சொல்கின்றனர். பின்னர் ஜெனி கஷ்டப்படுவதை பார்த்த செழியன் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி மனதை மாற்ற சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், அமிர்தா வீட்டிற்கு சென்ற பாக்கியா, உங்களது குடும்பத்தை பற்றி எழில் எல்லாம் சொன்னான். நீங்க அமிர்தாவை அழைத்து வந்து படிக்க வைப்பது எல்லாம் பெரிய விஷயம் தான் என சொல்கிறார். அதற்கு அமிர்தாவின் அம்மா எங்க மகன் இறக்கவில்லை, அவன் எழில் உருவத்தில் வந்து எங்களுக்கு தேவையான எல்லா வேலையும் செய்கிறான் என சொல்கிறார். எழில் உங்க பையன் என சொன்னது ரொம்ப சந்தோசம், நீங்க என்ன உதவினாலும் அவனிடம் கேளுங்க என சொல்கிறார்.

நல்ல புள்ளைய பெற்று வளர்த்திருக்கிங்க என சொல்ல, ஆமாம் உங்களுக்கு மட்டும் இல்லை எங்க வீட்டிலும் எல்லா உதவியும் எனக்கு இவன் தான் என சொல்கிறார். அதன் பின்னர் வீட்டிற்கு கட்டாயம் வர வேண்டும் என பாக்கியா சொல்கிறார். பாக்கியாவும் செல்வியும் ஒரு பெரிய வீட்டிற்கு சாப்பாடு கொடுக்க செல்ல சார் இருக்காரு உங்களை பார்க்க வேண்டும் என சொல்கிறார் என சொல்ல, பாக்கியா உள்ளே செல்கிறார். அங்கே அவர் சாப்பாடு நன்றாக இருக்கிறது எனவும், என் அம்மா சமைப்பது போல இருக்கிறது என சொல்கிறார்.

ஐஸ்வர்யாவை துரத்தும் கஸ்தூரி, இறுதி சடங்குகள் நடத்தும் அண்ணன்கள் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

பாக்கியா அதை கேட்டு சந்தோசப்படுகிறார். பின் செல்வி நாங்க ஆர்டர் பேரில் செய்து கொடுக்கிறோம். உங்களுக்கு தேவை என்றால் சொல்லுங்கள் என சொல்கிறார். பாக்கியா அங்கிருந்து கிளம்ப, மறுபக்கம் ஜெனி பயங்கரமாக வாந்தி எடுக்கிறார். செழியன் அவளை பார்த்து வருத்தப்பட, பாக்கியாவை வர சொல்கிறார். இப்படி தான் வாந்தி வருமா என செழியன் கேட்க நான் இப்படி தான் வாந்தி எடுத்து உன்னை பெற்றேன் என பாக்கியா சொல்கிறார்.

அப்போது செழியனும் ஜெனியும் தூங்க செல்ல, இவ்வளவு கஷ்டப்பட்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா என செழியன் கேட்கிறார். இன்னும் இதை பற்றி பேசுறியா பாப்பா பாவம் தான என ஜெனி கேட்க, உனக்கு வாழ்க்கை இருக்கு குழந்தை பெற்றுக் கொண்டால் உன் வாழ்க்கை முடிந்துவிடும் என செழியன் சொல்கிறார். அப்போது ஜெனி அப்போ இந்த குழந்தையை கலைக்க சொல்கிறாயா என கேட்கிறார். ஆமாம் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் எதிர் காலத்தில் பெற்றுக் கொள்ளலாம். எனக்கு குழந்தை இல்லை என்றால் பிரச்சனை இல்லை என செழியன் சொல்ல ஜெனி அழ தொடங்கினார்.

லட்சுமிக்கு சமைத்து கொடுத்ததால் கோவத்தில் பாரதி, வெண்பாவை வர வைத்து வெறுப்பேத்த திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

பாக்கியா ஜெனியிடம் வாந்தி எடுத்தியா என கேட்க ஆமாம் அதிகமாக வருகிறது என ஜெனி சொல்கிறார். புளிப்பு காரமாக சாப்பிட்டால் வாந்தி அதிகமாக வராது என செல்வி சொல்ல,பாக்கியா நான் செய்து தருகிறேன் என சொல்கிறார். ஜெனி நான் வேலைக்கு கிளம்புகிறேன் என சொல்ல, இவ்வளவு வாந்தி வருகிறது வேலைக்கு சென்று என்ன செய்ய போகிறாய் என பாக்கியா கேட்கிறார். ஐயோ நான் லீவு போட்டால் செழியன் திட்டுவான் என சொல்ல பாக்கியா நான் பேசவா என கேட்கிறார்.

வேண்டாம் ஆண்டி என சொல்ல, செல்வி இப்படி ஆகும் என தெரிந்தால் வேலைக்கு போகாமல் இருந்திருப்ப என சொல்கிறார். பேசாமல் வேலையை விட்டுவிடு என சொல்ல செழியன் திட்டுவான் என சொல்கிறார். உடனே பாக்கியாவிற்கு போன் வர அந்த பணக்கார வீட்டு அம்மா பேசுகிறார். சார் உங்களை பார்க்க வேண்டுமாம் கொஞ்சம் வர முடியுமா என கேட்க, பாக்கியா வரேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!