கோபி டூர் வராததால் வருத்தப்படும் இனியா,மயூராவின் பிடிவாதத்தை நினைத்து கோவப்படும் ராதிகா – இன்றைய எபிசோட்!

0
கோபி டூர் வராததால் வருத்தப்படும் இனியா,மயூராவின் பிடிவாதத்தை நினைத்து கோவப்படும் ராதிகா - இன்றைய எபிசோட்!
கோபி டூர் வராததால் வருத்தப்படும் இனியா,மயூராவின் பிடிவாதத்தை நினைத்து கோவப்படும் ராதிகா - இன்றைய எபிசோட்!
கோபி டூர் வராததால் வருத்தப்படும் இனியா,மயூராவின் பிடிவாதத்தை நினைத்து கோவப்படும் ராதிகா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா எதற்கு இங்கே வந்திருக்கிறாள் என ராதிகாவின் அம்மா சொல்ல அவளை நீ நம்பாதே என சொல்கிறார். பின் இனியா சுற்றுலா செல்ல கோபி வரவில்லை என கோவமாக இருக்கிறார். மறுபக்கம் மயூரா கோபியை திருமணம் செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருக்க ராதிகா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ராதிகா வீட்டிற்கு வர ராதிகாவின் அம்மா இவள் எதற்கு இங்கே வந்திருக்கிறாள் என கேட்கிறார். அப்போது ராதிகா அவங்க தான் வேலை இருப்பதாக சொன்னார்களே என ராதிகா சொல்ல அவள் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என ராதிகாவின் அம்மா சொல்கிறார். அவள் அங்கே விவாகரத்து கொடுத்துவிட்டு இங்கே வந்து எதுவும் தெரியாதது போல நடிக்கிறாள். கோபி இவளை பிரிந்து நிம்மதியாக வாழ கூடாது என அவள் முடிவோடு இருக்கிறாள் என ராதிகாவின் அம்மா சொல்ல அப்படி எல்லாம் இருக்காது என ராதிகா சொல்கிறார்.

பின் பாக்கியாவிற்கு ஜூஸ் கொடுக்க சீக்கிரமாக நீங்க நல்ல முடிவை எடுக்க வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் ஜெனியிடம் இனியா டூர் போக ஏற்பாடு செய்து விட்டீர்களா என கேட்கிறார். அப்போது ஜெனி செழியனுக்கு வேலை இருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு இனியா வருத்தப்படுகிறார். செழியன் எப்போது பிரீயாக இருக்கிறானோ அப்போ போகலாம் என ஈஸ்வரி சொல்ல ஆனால் இனியா வருத்தமாக இருக்கிறார். எழில் நாம இருவரும் போகலாம் என சொல்ல ஆனால் இனியா எல்லாரும் போக வேண்டும் என அடம் பிடிக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது கோபி வர எல்லாரும் டூர் போக நாங்க திட்டமிட்டு இருக்கிறோம் என சொல்ல கோபி இந்த வாரம் வேண்டாம் அடுத்து ஒரு நாள் போகலாம் என சொல்கிறார். இனியா எல்லாரும் ரெடியாக இருக்காங்க என சொல்ல அப்போ நீங்க போய்ட்டு வாங்க என கோபி சொல்கிறார். போன தடவையும் நீங்க வரவில்லை இந்த முறை இப்படி சொல்றீங்க என சொல்ல கோபி ஆபிசில் வேலை இருக்கிறது புரிந்து கொள் என சொல்ல எழில் இது வழக்கமாக நடப்பது தான என சொல்கிறார். ஜெனி நீங்க வந்தால் நன்றாக இருக்கும் என சொல்ல கோபி முடியாது என சொல்கிறார்.

எல்லாருக்கும் வேலை இருந்தால் டூர் வேண்டாம் என ஈஸ்வரி கோவமாக சொல்கிறார். யாரும் எதுவும் பண்ண வேண்டாம் என ஈஸ்வரி சொல்கிறார். பின் இனியா சோகமாக இருக்க கோபி வேலை இருப்பதாக சொல்கிறார். இன்னும் நீங்க எழில் படத்தை கூட பார்க்கவில்லை என சொல்ல எழில் பரவாயில்லை என சொல்கிறார். மறுபக்கம் ராதிகா மயூராவிற்கு ஜூஸ் கொண்டு வர அப்போது மயூரா ராதிகாவிடம் பேசாமல் இருக்கிறார். அப்போது ராதிகா என் மீது இன்னும் கோவமாக இருக்கிறாய் என கேட்க அப்போது மயூரா நீங்க கோபி அங்கிளிடம் நன்றாக பேச வேண்டும் அவர் வீட்டிற்கு வந்தால் வெளியே போக சொல்ல கூடாது என சொல்கிறார்.

மூர்த்தி ஆப்ரேஷனிற்கு பணம் கொடுத்த மீனாவின் அப்பா, கதிருக்கு தகவல் சொன்ன கண்ணா – இன்றைய எபிசோட்!

அப்போது ராதிகா திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை பேசாதே என சொல்கிறார். பின் ராதிகா ராஜேஷ் விஷயத்தில் எப்படி என்னை புரிந்து கொண்டாய் அது போல ஏன் இதில் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய் என கேட்கிறார். பின் மயூரா நான் என் நண்பர்களிடம் சொல்லிவிட்டேன் இப்போது அவர்களிடம் நீங்க திருமணம் செய்யவில்லை என சொன்னால் அவர்கள் என்னை பார்த்து சிரிக்கிறார்கள் என சொல்கிறார். பின் ராதிகா நீ ஏன் இதை பற்றி எல்லாம் அவர்களிடம் பேசினாய் என கேட்கிறார். அப்போது ராதிகாவின் அம்மா இந்த காலத்து பசங்க எல்லாம் இப்படி தான் என சொல்கிறார்.

பெரியவங்க நீங்க எடுக்கும் முடிவிற்கு அவள் என்ன செய்வாள் என ராதிகாவின் அம்மா சொல்கிறார். ராஜேஷ் அப்பா ஸ்கூலில் பிரச்சனை செய்த போது கோபி அங்கிள் தான் என்னை காப்பாற்றினார்கள் அதனால் நீங்க கோபி அங்கிளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என சொல்கிறார். ராதிகா முடியாது என சொல்ல மயூரா கோவமாக கிளம்புகிறார். பின் ராதிகாவின் அம்மா சின்ன பொண்ணு அவளுக்கு புரியாது என சொல்ல ராதிகா நான் அவளுடைய மனதை மாற்றுவேன் என சொல்கிறார்.

மறுபக்கம் கோபி வர இனியாவிடம் தூங்கவில்லையா என கேட்கிறார். அப்போது இனியா நீங்க எதுவும் சொன்னது போல செய்யமாட்டேங்குறீங்க என கேட்கிறார். கோபி எனக்கு உண்மையாகவே வேலை இருப்பதாக சொல்ல, இனியா நீங்க எனக்கு எதுவும் செய்யவே இல்லை என சொல்ல பாக்கியா அப்பாவிடம் அப்படி எல்லாம் பேசாதே என சொல்கிறார். பின் கோபி எனக்கு உன்னை தான் மிகவும் பிடிக்கும் என சொல்ல உண்மையாகவே பிடிக்குமா என இனியா கேட்கிறார். ஆமாம் என சொல்ல டூர் வராமல் இருப்பதை வைத்து எல்லாம் முடிவு செய்ய முடியுமா என கேட்கிறார். கண்டிப்பாக டூர் போகலாம் என சொல்ல ஆனால் இனியா நம்பவே இல்லை. பின் கோபியை இனியா இந்த வேலையை விட சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!