இனியாவிற்காக மீண்டும் பாக்கியாவை கூப்பிடும் தாத்தா, கோபியை காரணம் சொல்லும் எழில் – இன்றைய எபிசோட்!

0
இனியாவிற்காக மீண்டும் பாக்கியாவை கூப்பிடும் தாத்தா, கோபியை காரணம் சொல்லும் எழில் - இன்றைய எபிசோட்!
இனியாவிற்காக மீண்டும் பாக்கியாவை கூப்பிடும் தாத்தா, கோபியை காரணம் சொல்லும் எழில் - இன்றைய எபிசோட்!
இனியாவிற்காக மீண்டும் பாக்கியாவை கூப்பிடும் தாத்தா, கோபியை காரணம் சொல்லும் எழில் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா அம்மா வராமல் அழுது கொண்டே இருக்க ராமமூர்த்தியும் செழியனும் சென்று மீண்டும் பாக்கியாவை அழைக்கின்றனர். ஆனால் பாக்கியா கோபிக்கு ஏன் அக்கறை இல்லை அவர் செய்த தவறுக்கு அவர் தான் வந்து கூப்பிட வேண்டும் என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், தாத்தா கூப்பிட்டும் பாக்கியா வராத நிலையில் ஜெனி நான் சென்று மீண்டும் கூப்பிடுகிறேன் என சொல்கிறார். உடனே தாத்தா நான் கூப்பிட்டே அவள் வரவில்லை நீங்க கூப்பிட்டு வந்துவிடுவாளா என கேட்கிறார். ஈஸ்வரி அப்போ நாம பேச்சுக்கு மரியாதை இல்லையா என கேட்க, அதெல்லாம் அனுபவிப்பவர்களுக்கு தான் அந்த வலி தெரியும் என சொல்கிறார். எல்லாம் சரி தான் அவளுக்கு இப்படி நடந்திருக்க கூடாது. இருந்தாலும் ஒரு பிரச்சனையை முடித்து அவள் இறங்கி வர வேண்டும் அதான் குடும்பத்திற்கு நல்லது என ஈஸ்வரி பேசுகிறார்.

அப்போது இனியா மாடி படியில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார். அனைவரும் சென்று என்ன ஆச்சு என கேட்க, அம்மா தாத்தா கூப்பிட்டும் வரவில்லை. அதனால் அம்மா இனிமேல் வரவே மாட்டார் என நினைத்து பயமாக இருக்கிறது என இனியா சொல்கிறார். யாரு கூப்பிட்டாலும் அம்மா வரமாட்டாங்க என இனியா வருத்தப்படுகிறார். இனிமேல் அம்மாவை நான் பார்க்கவே முடியாது என சொல்ல அனைவரும் அழாமல் இருக்க சொல்கிறார்கள். பின் தாத்தாவை மீண்டும் ஒருமுறை எனக்காக கூப்பிட்டு பார்க்க சொல்ல, தாத்தாவும் செழியனும் கிளம்புகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் பாக்கியாவிற்கு செல்வி சாப்பாடு கொடுக்கிறார். பாக்கியா சரியாக சாப்பிடாமல் இருக்கிறார். பின் செல்வி சாப்பிட சொல்ல, ராமமூர்த்தி வருகிறார். அவர் பாக்கியாவிடம் இனியா அங்கே சாப்பிடாமல் அழுது கொண்டே இருக்கிறாள் அவளுக்கு என்ன பதில் சொல்வது என தாத்தா கேட்க, செழியன் அம்மா இனியா அம்மா வேண்டும் இப்பவே பார்க்க வேண்டும் என அழுவதாக சொல்கிறார். தாத்தா நான் சொல்லி புரிய வைக்க வேண்டாம் உன் பசங்க எவ்வளவு அக்கறையாக இருப்பாங்க என தெரியும், எழில் உன்னுடன் இருக்கிறான். செழியனுக்கு புரியும், ஆனால் இனியாவிற்கு எதுவும் புரியாது என சொல்கிறார்.

நான் வந்து கூப்பிட்ட போது உங்க மகளாக இருந்தால் வர சொல்லுவீங்களா என கேட்டாய் ஆனால் இப்போது உன் மகள் தவித்து கொண்டிருக்கிறாள். அவளுக்காக நீ வர வேண்டும் என சொல்ல, பாக்கியா இனியா எப்படி இருக்கிறாள் என கேட்கிறார். அழுது கொண்டே இருக்கிறாள் என சொல்கிறார். செழியன் அப்பாவை பற்றி நினைக்காமல் இனியா பற்றி நினைத்து வர வேண்டும் என சொல்ல, நீ இனியாவிற்காக வர வேண்டும் என தாத்தா சொல்கிறார். பின் அவர் கிளம்பிவிட, எழில் நீ இப்படி எல்லாம் கஷ்டப்படாதே அவங்க பேசுவது அவங்களுக்கு கடமை நீ வருத்தப்படாதே என சொல்கிறார்.

இனியா சின்ன புள்ள தான் அவங்க வந்து கூப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என செல்வி கேட்கிறார். இவங்க இனியாவை காரணம் காட்டி உன்னை கூப்பிடுவது போல இருக்கிறது என செல்வி சொல்ல, பாக்கியா அவள் நான் பெற்ற மகள் என சொல்கிறார். அவங்க எல்லாரும் உன் குற்ற உணர்ச்சியை தூண்டி விடுவதாக செல்வி சொல்ல எழில் ஆமாம் என சொல்கிறார். பின் பாக்கியா இனியா பாவம் தான என சொல்ல எழில் இனியாவை இங்கே கூட்டி வந்துரலாம் என சொல்கிறார். ஆனால் பாக்கியா அவள் குடும்பத்துடன் இருக்கிறாள் அவளை பிரிக்க வேண்டாம் என சொல்கிறார்.

இங்கே வந்த பின் அங்கே போக வேண்டும் என சொன்னால் என்ன செய்வது என பாக்கியா கேட்க அதுவும் சரி தான் என எழில் சொல்கிறார். பின் பாக்கியா இனியாவை நினைத்து கவலைப்பட ஏற்கனவே உனக்கு நிறைய கவலை இருக்கிறது என எழில் சொல்கிறார். இப்போ அப்பாவிற்கும் அம்மாவிற்கும் தான் சண்டை அதனால் அம்மா அங்கே வர வேண்டும் என்றால் அப்பா தான வந்திருக்க வேண்டும் என எழில் சொல்கிறார். செல்வி சரி தான் தம்பி என சொல்ல, எழில் அவர் மனசார வந்து உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இனியா கஷ்டப்படுகிறாள் நீ வா என சொல்ல வேண்டும்.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய எச்சரிக்கை – முதல்வர் அறிவிப்பு!

அது எதுவும் நடக்கவில்லையே, அவருக்கும் தான இனியா புள்ள என எழில் கேட்கிறார். பாக்கியா அவர் இத்தனை வருஷத்தில் மன்னிப்பு கேட்டதே இல்லை என சொல்கிறார். மன்னிப்பு கேட்க மனசு வேண்டும் என பாக்கியா சொல்கிறார். அவர் எங்கே சொல்வாரு இதற்கு முன்னாடி விடு இப்போ இவ்வளோ நடந்திருக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்கிறார். நான் எல்லாரையும் காய படுத்துகிறேன் என பாக்கியா சொல்ல எழில் உலகத்தில் மோசமான விஷயம் நம்மை நாமே தப்பு சொல்வது அதை மாற்றிக் கொள் என எழில் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!