ஊரை விட்டு செல்வதை நினைத்து வருத்தப்படும் மயூரா, செழியனிடம் மன்னிப்பு கேட்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ஊரை விட்டு செல்வதை நினைத்து வருத்தப்படும் மயூரா, செழியனிடம் மன்னிப்பு கேட்கும் கோபி - இன்றைய
ஊரை விட்டு செல்வதை நினைத்து வருத்தப்படும் மயூரா, செழியனிடம் மன்னிப்பு கேட்கும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ஊரை விட்டு செல்வதை நினைத்து வருத்தப்படும் மயூரா, செழியனிடம் மன்னிப்பு கேட்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், மயூரா ஊரை விட்டு வெளியே செல்வதை நினைத்து ராதிகாவிடம் வருத்தப்பட்டு பேசுகிறார். மறுபக்கம் செழியன் கோபியிடம் பேச வர நான் செய்தது தவறு தான் என கோபி மன்னிப்பு கேட்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி எழில் தாத்தா முன்னாடியே சொல்லி இருந்தால் கல்யாணம் செய்ய முடிவு எடுக்கும் அளவிற்கு போகாமல் இருந்துருக்கும் என சொல்கிறார். இனியா தனியாக இருக்கிறாள் அதனால் அம்மா வருவாங்க தான என சொல்ல ஈஸ்வரி என்ன நடந்தாலும் கோபி உடன் பாக்கியா வாழ தான் வேண்டும். பிரிந்து இருக்க முடியாது. கோபி மாற தான் வேண்டும் என சொல்ல தாத்தா பேசாமல் கிளம்பி செல்கிறார். பின் ஈஸ்வரி கோபியை பார்த்துக் கொள்ள சொல்லி செழியனிடம் சொல்கிறார். அவன் மனதில் என்ன நினைத்து இப்படி ஒரு காரியம் செய்தான் என தெரியவில்லை என சொல்கிறார்.

மறுபக்கம் மயூரா தூங்காமல் போனை பார்த்துக் கொண்டிருக்க அப்போது ராதிகா தூங்க சொல்கிறார். ஆனால் மயூரா நான் இந்த ஸ்கூலை விட்டு சென்றுவிட்டால் எல்லாரும் மறந்துவிடுவார்கள் அதனால் இப்பவே நான் அவர்களிடம் பாய் சொல்கிறேன் என சொல்கிறாள். ராதிகா அப்போது நீ சின்ன பொண்ணு இப்போது அப்படி இல்லை என சொல்ல இல்லை அம்மா முன்னாடி நாம இருந்த இடத்தில் இருந்தவர்கள் எல்லாரும் என்னுடன் பேசவில்லை என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ராதிகா நாம போகும் இடத்தில் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள் அவர்கள் உன்னுடன் நன்றாக பேசுவார்கள் என சொல்ல, மயூராவை சமாதானம் செய்து தூங்க வைக்கிறார். பின் கோபி நடந்ததை நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் பாக்கியாவும் நடந்ததை நினைத்து கவலையில் இருக்கிறார். அப்போது கோபியை பார்க்க செழியன் வருகிறார். செழியனை பார்த்ததும் கோபி மன்னிப்பு கேட்கிறார். நான் செய்தது எல்லாம் தவறு தான் என கோபி சொல்லி வருத்தப்படுகிறார். உன்னுடைய மனசு எவ்வளவு கஷ்டப்படும் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என சொல்கிறார்.

ஆனால் செழியன் இல்லை அப்பா எங்க ஆபிசில் கூட ஒருவர் 65 வயதில் இரண்டாவது கல்யாணம் செய்து இருக்கிறார். ஆனால் நம்ம வீட்டில் நடக்கும் போது நான் எப்படி நினைப்பது என எனக்கு தெரியவில்லை என செழியன் சொல்கிறார். என் மனசில் என் வாழ்க்கையில் ஒரு வலி ஒரு விரக்தி, இந்த வீட்டில் நான் ஒரு நல்ல அப்பாவா எல்லாத்தையும் செய்ய வேண்டிய ஆளாக தான் இருக்க வேண்டும் எப்போதும் அப்படி தான் இருக்கேன். என் வாழ்க்கையில் எதோ நிறைவேறாத ஆசை அதனால் தான் இப்படி செய்துவிட்டேன் என சொல்கிறார்.

நான் பண்ண தப்பை நியாயப்படுத்தி பேசுவதாக நினைக்காதே என் வாழ்க்கையில் தீராத ஆசை அது எனக்கே தெரியாமல் வெளியே வந்துவிடுகிறது. என் வேலை கடமை என எல்லாம் இருந்தாலும் என்னை மீறி தடுமாறிவிட்டேன் என சொல்கிறார். என் தரப்பில் நான் நியாயப்படுத்தி பேசினாலும் நான் உன்னை பற்றி குழந்தைகளை பற்றி பாக்கியா பற்றி நினைத்திருக்க வேண்டும். இத்தனை வருஷம் உங்களை பற்றி தான் நினைத்தேன் ஆனால் எனக்கு எனக்கு சமமாக ஒரு மனைவி தேவைப்பட்டால்ஆனால் அது என் வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை

வலுக்கட்டாயமாக கல்யாண விஷயத்தில் மாட்டிக் கொண்டேன். சமையல் தவிர மற்ற விஷயங்கள் எனக்கு தேவைப்பட்டது. அது தான் இந்த வயசில் வெளியே வந்து என்னால் கண்ட்ரோல் பண்ண முடியாமல் போனது என சொல்லி வருத்தப்படுகிறார். நான் உங்களை பற்றி யோசித்து இருக்க வேண்டும் என அழுகிறார். என்னை மன்னித்துவிடு என கெஞ்ச எனக்கு புரிகிறது அப்பா என சொல்கிறார். கட்டாயப்படுத்தி எல்லாம் நடந்துவிட்டது ஆனால் என் நிம்மதியை விட்டுவிட்டு கூட இந்த குடும்பத்தை பற்றி நினைத்தேன். ஒரு நிமிஷம் தான் என்னை பற்றி நினைத்து அது என்னை எவ்வளவு தூரம் கொண்டு வந்துவிட்டிருக்கிறது பாரு என நினைத்து வருத்தப்படுகிறார்.

விஜய் தொலைக்காட்சி சீரியல் நடிகர்களை சந்திக்க வேண்டுமா? ரசிகர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

நான் செய்த தவறு உங்க எல்லார் மனசையும் வருத்தப்படுத்திவிட்டது. நான் உங்களை பற்றி நினைக்காமல் என்னை பற்றி நினைத்தது தான் தவறாக போனது என சொல்லி வருத்தப்படுகிறார். அப்போது ஜெனி கோபிக்கு சாப்பாடு கொண்டு வருகிறார். கோபியை சாப்பிட சொல்ல அப்பா அம்மா சாப்பிடங்களா என கேட்கிறார். சாப்பிட்டதாக சொல்ல, அம்மா ஆபிசில் தான் இருக்காங்க நீங்க சாப்பிடுங்க என சொல்கிறார். பின் இனியா என்ன செய்கிறாள் என கேட்க இனியா தான் மிகவும் வருத்தப்படுவதாக சொல்கிறார். ஆண்டிக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஆன்டிக்கு உங்களுடன் இருந்தால் பெருமையாக நினைப்பார்.

உங்களுடன் இருந்தால் பாதுகாப்பாக இருப்பார். இந்த குடும்பத்தை தவிர அவர் எதை பற்றியும் நினைத்ததே இல்லை இது தான் முதல் முறை அவங்களை பற்றி நினைத்து இருக்கிறார் என சொல்கிறார். பின் செழியன் ஜெனியை போக சொல்கிறார். கோபி செழியனிடம் என்னை மன்னித்துவிட்டேன் என சொல்லு செழியா அப்போது தான் எனக்கு ஆறுதலாக இருக்கும் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!