பாக்கியாவை அலுவலகத்தில் இருக்க சொல்லும் எழில், கோபியை வெறுக்கும் இனியா – இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவை அலுவலகத்தில் இருக்க சொல்லும் எழில், கோபியை வெறுக்கும் இனியா - இன்றைய எபிசோட்!
பாக்கியாவை அலுவலகத்தில் இருக்க சொல்லும் எழில், கோபியை வெறுக்கும் இனியா - இன்றைய எபிசோட்!
பாக்கியாவை அலுவலகத்தில் இருக்க சொல்லும் எழில், கோபியை வெறுக்கும் இனியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா எழில் மடியில் படுத்துக் கொண்டு நடந்ததை நினைத்து வருத்தப்பட செல்வி அதையே நினைக்காதே என டீ குடிக்கிறார். மறுபக்கம் இனியா கோபி நடந்து கொண்டதை நினைத்து வெறுப்பை காட்டுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா எழில் மடியில் படுத்துக் கொண்டிருக்க அப்போது பாக்கியா கோபி பேசியதை பற்றி நினைத்து பார்க்கிறார். இப்படி ஒரு புருசனுடன் இருப்பது பற்றி பாக்கியா பேசியதை எழில் நினைத்து பார்க்கிறார். பின் செல்வி நேற்றில் இருந்து நீ ஒன்றும் சாப்பிடவில்லை. அதனால் சாப்பிடு என சொல்ல பாக்கியா வேண்டாம் என சொல்கிறார். எழில் சாப்பிடு என சொல்ல செல்வி நான் சென்று டீ போடுகிறேன் என சொல்கிறார். பின் எழில் நீ நல்லவள் அம்மா உன் அம்மாவிற்காக எல்லாம் செய்கிறாய்.

பாட்டிக்கு தேவையான எல்லாம் செய்கிறாய், தாத்தாவிற்கு உடம்பு சரி இல்லாமல் இருந்த போது நீ தான் எல்லாம் செய்தாய் நீ மிகவும் நல்லவள் உன்னை பிடிக்கவில்லை என்றால் அவர் போகட்டும் எங்களுக்கு நீ தான் முக்கியம் என சொல்ல செல்வி அக்கா பாவம் அந்த ராதிகாவுக்கு கல்யாணம் ஆக வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டதாம் எப்படி இருந்துருக்கு அக்கா அவரை போய் ஏமாற்றிவிட்டார். இந்த ஆம்பளைங்களே இப்படி தான் என சொல்ல மனசே ஆறவில்லை என செல்வி சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் வீட்டிற்கு நான் செல்கிறேன் என செல்வி கிளம்புகிறார். வீட்டில் பாக்கியா எங்கே போனார் என தெரியாமல் ஜெனி இனியா ஈஸ்வரி தாத்தா என அனைவரும் வருத்தத்துடன் இருக்கின்றனர். பின் ஈஸ்வரி பாக்கியாவிற்கு போன் செய்து பார் என சொல்ல இனியா அம்மா போன் வீட்டில் இருப்பதாக சொல்கிறார். எழிலிற்கு பண்ணி பார் என சொல்ல ஆனால் போன் போகவில்லை. பின் செல்விக்கு போன் செய்ய சொல்ல வீட்டில் போன் இருக்கிறது. அப்போது செல்வி வருகிறார்

போனை வைத்துவிட்டு போய்ட்டேன் என சொல்ல, பாக்கியா எங்கே என அனைவரும் கேட்கின்றனர். அக்கா ஆபிசில் தான் இருக்கிறது என செல்வி சொல்ல அப்போது தான் நிம்மதியாக இருக்கிறது. பாக்கியாவிற்கு இரண்டு சேலை கொடுங்க என சொல்ல இனியா சென்று எடுக்க போகிறார். அப்போது கோபி இனியாவை பார்க்க இனியா கோவமாக எதுவும் செல்லாமல் கிளம்புகிறார். பின் இனியா புடவை கொடுத்துவிட்டு அம்மா வந்துருவாங்களா என கேட்க உன் முகத்திற்காக வந்தால் தான் என சொல்கிறார்.

பின் இனியா கோபியை பார்க்க மாடிக்கு வருகிறார். அப்போது நீங்க இப்படி எல்லாம் செய்வீர்கள் என நான் நினைக்கவே இல்லை. அம்மா பாவம் என சொல்கிறார் உங்களுக்கு அம்மாவை பிடிக்கவில்லை என எனக்கு தெரியும் ஆனால் அதற்காக இப்படியா செய்வீர்கள். என்னையும் உங்களுக்கு பிடிக்கவில்லை என சொல்ல கோபி அப்படி எல்லாம் சொல்லாதேடா உன் மீது நான் உயிரே வைத்திருக்கேன். நான் இந்த வீட்டை விட்டு சென்று இருந்தாலும் உன்னையும் கூட்டிக் கொண்டு சென்று இருப்பேன் என சொல்கிறார்.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை – கனமழை எதிரொலி!

நான் கூப்பிட்டாலும் வரமாட்டேன் என சொல்ல ஏற்கனவே கோபி அம்மாவை பிரிந்தால் யார் உடன் இருப்பாய் என கேட்டது நியாபகத்திற்கு வருகிறது. இதனால் தான் கேட்டீங்களா என கேட்க கோபி சாரி சொல்கிறார். அம்மா மிகவும் பாவம் உங்களை பார்க்கவே பிடிக்கவில்லை இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை என இனியா சொல்கிறார். இனிமே உங்களிடம் பேசவே மாட்டேன் என இனியா சொல்கிறார். கோபி அதை நினைத்து வருத்தப்படுகிறார்.

பின் ஜெனி தாத்தாவிற்கு சாப்பாடு கொடுக்க ஆனால் தாத்தா சாப்பிடமாட்டேன் என சொல்கிறார். ஈஸ்வரி சாப்பிட சொல்ல தாத்தா சாப்பிடுகிறார். பின் ஜெனி ஈஸ்வரியை சாப்பிட சொல்ல ஆனால் அவர் வேண்டாம் ஏன் சொல்கிறார். சாப்பிடாமல் இருந்தால் சுகர் லோ ஆகிவிடும் என சொல்ல, தாத்தா நான் மட்டும் சாப்பிட்டு என்ன செய்ய என கேட்கிறார். பின் ஜெனி ஆன்டி போனாலும் நம்மை பற்றி தான் நினைத்துக் கொண்டிருப்பார் என சொல்கிறார். பின் செழியன் வர அம்மாவை வர சொல்கிறேன் என சொல்கிறார். ஆனால் ஜெனி அவங்க சமாதானம் ஆக நேரம் கொடுக்க வேண்டும் என சொல்கிறார்.

அம்மா இல்லாமல் நன்றாக இல்லை என சொல்ல அம்மா இருந்த போது நீ அவங்களிடம் பேசுனியா என கேட்கிறார். அதற்காக அவளை நினைக்க கூடாதா என ஈஸ்வரி கேட்க, என்ன நடந்தாலும் அம்மா வீட்டில் இருக்கிறார் என்ற நிம்மதி இருந்தது ஆனால் இப்போது அம்மா இல்லாமல் ஒரு மாதிரி இருக்கிறது என சொல்கிறார். எல்லாம் நடந்து முடிந்துவிட்டது இப்போது பேசி எதுவும் மாறாது என சொல்கிறார். எழில் தாத்தா எப்படி இந்த விஷயத்தை மறைத்து இருந்தார்கள் என நினைத்து அதிர்ச்சி அடைய அன்னைக்கே சொல்லி இருந்தால் விவாகரத்து வரை போகாது என ஈஸ்வரி சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!