கோர்ட்டில் இருந்து வந்த விவாகரத்து நோட்டீஸ், கோபியை திட்டிய ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோர்ட்டில் இருந்து வந்த விவாகரத்து நோட்டீஸ், கோபியை திட்டிய ஈஸ்வரி - இன்றைய
கோர்ட்டில் இருந்து வந்த விவாகரத்து நோட்டீஸ், கோபியை திட்டிய ஈஸ்வரி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோர்ட்டில் இருந்து வந்த விவாகரத்து நோட்டீஸ், கோபியை திட்டிய ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபிக்கு கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வர குடும்பத்தில் அனைவரும் கோபி நடந்து கொண்டதை நினைத்து கோவப்படுகின்றனர். பின் பாக்கியா பிடிக்காமல் வாழ்க்கையை எப்படி நான் வாழ்கிறேன் என மனம் வருத்தப்பட்டு பேசுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக பாக்கியா சொல்ல ஆனால் ஈஸ்வரி அதை நம்பவில்லை. அப்போது போஸ்ட்மேன் வந்து போஸ்ட் ஒன்றை கொடுக்கிறார். ஈஸ்வரி கோபியை சென்று வாங்க சொல்கிறார். கோபி வாங்கி கொண்டு வர அப்போது பாக்கியா அந்த லெட்டரை வாங்கி எழிலிடம் கொடுக்கிறார். எழில் அதை வாங்கி படித்துவிட்டு அதை கிழித்து போட செல்கிறார். ஆனால் பாக்கியா அதை வாங்கி என்ன இது என கேட்கிறார். எழில் இருவரும் விருப்பப்பட்டு பிரிவதாக சொன்னதால் நாளை கோர்ட்டிற்கு வர சொல்லி அனுப்பி இருப்பதாக சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பாக்கியா அதை கேட்டு அதை இப்போது என்னை நம்புகிறீர்களா என கேட்கிறார். 6 மாசம் ஆகிவிட்டது இன்னும் வரவில்லையே என நினைத்தேன் வந்துவிட்டது என பாக்கியா சொல்கிறார். அப்போது செழியன் என்ன அப்பா இதெல்லாம் என கேட்க ஈஸ்வரி என்ன கோபி இதெல்லாம் என கேட்கிறார். ஒரு மகன் வேண்டும் என ஆசை பட்டு உன்னை பெற்றுக் கொண்டேன் இந்த குடும்பத்தை நீ பார்த்துக் கொள்வாய் என எல்லாரிடமும் உன்னை பற்றி பெருமையாக பேசினேன். ஆனால் நீ இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டாய் என சொல்ல கோபிக்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார்.

பின் ராமமூர்த்தி நீ ஒரு ஏமாத்துக்காரன் என எனக்கு தெரியும் என சத்தம் போடுகிறார். எழில் என் அம்மாவை ஏமாற்றிவிட்டு நீங்க நினைத்த வாழ்க்கையை வாழ முடியுமா என கோபி சட்டையை பிடித்து கேட்கிறார். ஆனால் பாக்கியா எழிலை கோவப்பட வேண்டாம் என சொல்கிறார். நாம வேணும் என நினைக்கும் உறவிடம் தான் கோவப்பட வேண்டும் என சொல்கிறார். பின் ஈஸ்வரியிடம் அப்படி எல்லாம் இல்லை அம்மா என சொல்ல ஈஸ்வரி கோபி கன்னத்தில் அறைந்துவிடுகிறார். நீ இப்படி எல்லாம் செய்வாய் என நான் நினைத்து கூட பார்த்தது இல்லை என அழுகிறார்.

இவனை நான் ராதிகா உடன் பல மாதங்களுக்கு முன் பார்த்தேன். இவனிடம் பல முறை எச்சரித்தேன். ராதிகா வீட்டில் அவருடைய அம்மாவிடம் சொன்னேன். ஆனால் அவளும் இவனை விடவில்லை. இவனை சத்தம் போட மாடிக்கு சென்று தான் கீழே விழுந்தேன். என் உடம்பு இப்படி ஆனதை பார்த்து சந்தோசப்பட்டது இவனாக தான் இருப்பான் என ராமமூர்த்தி சொல்கிறார். இவனால் தான் எனக்கு இந்த நிலைமை என தாத்தா சொல்ல இனியா பயங்கரமாக அழுகிறார். பின் ஈஸ்வரி வயசு பெண்ணை வைத்து கொண்டு இப்படி எல்லாம் செய்யலாமா என ஈஸ்வரி கேட்கிறார்.

பின் கோபி பாக்கியாவிடம் வந்து சாரி என சொல்ல பாக்கியா எல்லாம் பண்ணிவிட்டு சாரி என சொன்னால் சரியாகிவிடுமா என கேட்கிறார். எல்லா பெண்களும் இருக்கும் வீட்டில் நடக்கும் அவமானங்களை தாங்கி கொண்டு இருக்க காரணம் எதோ ஒரு நம்பிக்கையில் என சொல்கிறார். எதுக்கு சாரி ராதிகா உடன் நான் திருமணம் செய்து வைக்க வேண்டுமா என கேட்கிறார். பின் எழில் இனியா கெஞ்சி தீம் பார்க் வராமல் இருந்த அவர் அவங்க குடும்பத்துடன் வந்ததை நான் பார்த்தேன் என சொல்கிறார். பாக்கியா போதும் பிடிக்காத வாழ்க்கை பிடிக்காத வாழ்க்கை என சொன்னீர்களே நானும் பிடிக்காத வாழ்க்கையாக இருந்தும் 3 குழந்தைகளை பெற்று இருக்கிறேன்.

தமிழகத்தில் நாளை (ஜூலை 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

குழந்தைகளுக்காக வாழ்கிறேன் உங்களை போல நான் நினைக்கவே இல்லை என சொல்கிறார். இன்னொரு பெண் கையை பிடித்துக் கொண்டு என்னை விட்டு போகாதே என சொல்வதை பார்த்த எனக்கு எப்படி இருக்கும், அதை எல்லாம் பார்த்து உங்களுடன் வாழ பைத்தியமா நான் என கேட்கிறார். எனக்கு நாகரிகம் தெரியாது சாப்பிட தெரியாது பேச தெரியாது என நீங்க சொல்வீங்களே நீங்க செய்தது தான் நாகரிகமா என கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!