கோபி ராதிகா உறவை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, விபத்து பற்றி தெரிந்து வந்த குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவின் உறவை பற்றி பாக்கியாவிற்கு எல்லா உண்மையும் தெரிந்து அவர் மிகவும் வருத்தப்படுகிறார். பின் கோபியின் விபத்து பற்றி தெரிந்து குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா கோபியை ஒன்றாக பார்த்து பாக்கியாவிற்கு எல்லா உண்மையும் தெரிய வருகிறது. அதனால் அவர் மனம் உடைந்து ரோட்டில் நடந்ததை எல்லாம் நினைத்துக் கொண்டே வருகிறார். கோபி சந்தேகப்படும் படி நடந்து கொண்டது. செல்வி பல முறை கோபியை நம்பாதே என சொன்னது, எழில் கோபியை விட்டு வர சொன்னது, ராதிகா தன்னை திருமணம் செய்ய இருப்பவர் பற்றி சொன்னது எல்லாம் நினைத்து பார்க்கிறார்.
அவரால் அதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோபி மீது சந்தேகம் வர அவர் கேட்ட கேள்விகளுக்கு கோபி சொன்ன பொய் எல்லாம் நியாபகம் வருகிறது. பின் ராதிகா கோபி நல்லவர் இல்லை என சொல்ல ஆனால் பாக்கியா அவர் நன்றாக இருக்க வேண்டும் என ஆறுதல் சொன்னதை பற்றியும், கோபி குடித்துவிட்டு வந்து தன்னை பிடிக்கவில்லை என சொன்னதை எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டு மழையில் நனைந்து கொண்டு வருகிறார்.
TN Job “FB Group” Join Now
அப்போது ரோட்டில் நாங்க நிற்க போலீஸ் வந்து கிளம்ப சொல்கிறார். மறுபக்கம் கோபி எழுந்து நர்ஸிடம் விவரங்களை கேட்கிறார். அப்போது உங்க மனைவி தான் வந்து உங்களை பார்த்து மிகவும் பதட்டப்பட்டு இருப்பதாக சொல்கிறார். டாக்டர் உங்களை பார்த்து விட்டு எல்லாம் சரியாகிவிட்டதாக சொன்ன வரை அவர் பதட்டமாக தான் இருந்தார் என சொல்கிறார். உங்க மனைவிக்கு உங்க மீது எவ்வளவு அக்கறை என சொல்ல கோபி அதை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் பாக்கியா பற்றி சொல்லலாமா என நினைத்து ஆனால் வேண்டாம் என நினைக்கிறார்.
பின் போனை வாங்கி பார்க்க வீட்டில் இருந்து பல முறை போன் வந்துள்ளது. பின் கோபி செழியனுக்கு போன் செய்து பேச அப்போது எங்கே இருக்கீங்க என செழியன் கேட்கிறார். நான் மருத்துவமனையில் இறுக்கேன் வரும் போது சின்ன விபத்து என கோபி சொல்ல செழியன் பதட்டம் அடைகிறார் என்ன ஆச்சு அப்பா என கேட்க எதுவும் இல்லை சின்ன அடி தான் இப்போது மருத்துவமனையில் இருக்கேன் என சொல்கிறார் . பின் ஈஸ்வரி நான் உடனே பார்க்க வேண்டும் என சொல்ல அனைவரும் கிளம்பி மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
தமிழகத்தில் நாளை (ஜூலை 6) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அப்போது கோபியை கேட்டு உள்ளே சென்று கோபி நிலைமையை பார்த்து வருத்தப்பட்டு அழுகின்றனர். கோபி எனக்கு ஒன்றுமில்லை எல்லாம் சரியாகிவிட்டது என சொல்ல ஈஸ்வரி எல்லாம் என்னால் தான் நான் போன் செய்யாமல் இருக்க வேண்டும் என சொல்கிறார். கோபி அதெல்லாம் இல்லை என சொல்ல என்ன விஷயம் எதற்கு வர சொன்னீர்கள் என கேட்கிறார். ஒன்றுமில்லை அப்பறம் பேசிக்கலாம் என ஈஸ்வரி சொல்கிறார். பின் பாக்கியா அதிர்ச்சியில் வீட்டிற்கு வர அங்கே ராமமூர்த்தி இருக்கிறார்.