கோபியின் அலுவலகத்திற்கு வரும் ராதிகா, ஆர்டர் செய்த சாப்பாட்டை கொண்டு வரும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
கோபியின் அலுவலகத்திற்கு வரும் ராதிகா, ஆர்டர் செய்த சாப்பாட்டை கொண்டு வரும் பாக்கியா - இன்றைய
கோபியின் அலுவலகத்திற்கு வரும் ராதிகா, ஆர்டர் செய்த சாப்பாட்டை கொண்டு வரும் பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
கோபியின் அலுவலகத்திற்கு வரும் ராதிகா, ஆர்டர் செய்த சாப்பாட்டை கொண்டு வரும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கோபியின் அலுவலகத்திற்கு வருகிறார். பின்னர் வீட்டு சமையலில் ஹோட்டல் சாப்பாடு வேண்டும் என கோபி சொல்கிறார். அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் பாக்கியாவிடம் சாப்பாடு ஆர்டர் செய்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கோபியின் அலுவலகத்திற்கு திடீரென வருகிறார். கோபி அதை பார்த்து சந்தோசப்படுகிறார். பின்னர் சாப்பாடு வேண்டும் என கோபி அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரிடம் நல்ல வீட்டு சாப்பாடு ஆர்டர் செய்ய சொல்கிறார். அலுவலகத்தில் வேலை செய்பவர் அனைவரிடம் எங்கே சாப்பாடு நன்றாக இருக்கும் என கேட்கிறார். அதில் ஒருவர் நம்ம வீட்டு பக்கத்தில் ஈஸ்வரி பூட்ஸ் என ஒரு அம்மா சமையல் செய்கின்றனர்.

அண்ணன் தான் மாளிகை பொருள் அனுப்பியது என தெரிந்து கதறி அழும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அவங்களிடம் சாப்பாடு நன்றாக இருக்கும் என சொல்லி நம்பர் கொடுக்கிறார். அவர் போன் செய்து சாப்பாடு வேண்டும் என ஆர்டர் செய்கிறார். பாக்கியா ரொம்ப தூரம் என சொல்ல அவர் வற்புறுத்தி வர சொல்கிறார். பாக்கியா சரி என்று சொல்ல, இடம் தேடி கண்டுபிடித்து வருகிறார். பின்னர் கோபியின் அலுவலகத்தை பார்த்து ஆர்டர் செய்தவருக்கு போன் செய்கிறார். அந்த அலுவலகத்தில் இருந்து தான் ஆர்டர் செய்கிறேன் என சொல்ல பாக்கியா சந்தோசப்படுகிறார்.

உள்ளே சென்று பார்க்க பெரிய அலுவலகமாக இருக்கு என செல்வி சொல்கிறார். அதன் பின்னர் அலுவலகத்தில் வேலை செய்பவர் பாக்கியா கோபியின் மனைவி என அடையாளம் காண்கிறார்.வாங்க மேடம் நீங்க என்ன இங்க என்று கேட்க நான் தான் ஈஸ்வரி பூட்ஸ் நடத்துகிறேன் என சொல்கிறார். நீங்க தானா இதை கொடுக்க இவ்வளவு தூரம் வர வேண்டுமா முன்னாடியே சொன்னால் ஆள் அனுப்பி வாங்கிருப்பேன் என சொல்லி பாக்கியாவை அமர வைக்கிறார்.

ஹேமாவை சௌந்தர்யா வீட்டில் கொண்டு போய் விடும் கண்ணம்மா, வம்பிழுக்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

பின்னர் கோபியும் ராதிகாவும் பேசிக் கொண்டிருக்க, நீண்ட நேரம் ஆகியும் சாப்பாடு வரவில்லை எனவே கோபி வேலை செய்பவருக்கு போன் செய்கிறார். அவர் மேடம் வந்திருக்காங்க என்று சொல்ல கோபி யார் என்று கேட்கிறார். உங்க மனைவி என சொல்ல கோபி அதை கேட்டு பதட்டம் ஆகிறார். பின்னர் அவங்களை அங்கையே இருக்க சொல்லு நான் வருகிறேன் என சொல்ல ராதிகா என்னாச்சு என கேட்கிறார். முக்கியமான கிளைன்ட் வந்துருக்காங்க. உன்னிடம் பேசிக் கொண்டே நான் மறந்துவிட்டேன் என சொல்லி வெளியே வருகிறார். அங்கே பாக்கியா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!