கோபியை மிரட்டும் ராஜேஷ், போலீசிடம் பொய்யான புகார் அளிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராஜேஷ் கோபியை சந்தித்து இரவு உன் வீட்டிற்கு வந்து எல்லாரிடமும் உன்னை பற்றி சொல்கிறேன் என்று மிரட்டுகிறார். கோபி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நிலையில், போலீசை அழைத்து பொய் கேஸ் கொடுக்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியும் ராதிகாவும் ஒன்றாக இருப்பதை பார்த்து ராஜேஷ் கோபப்படுகிறார். கோபியை தனியாக சந்தித்து பேசுகிறார். என் பொண்டாட்டியை எதற்காக சந்தித்து பேசுகிறாய். என் பையனிடம் நீயும் என் பொண்டாட்டியும் ஒன்றாக இருக்கும் போட்டோ காண்பித்து சொல்லிவிட்டேன் ஆனாலும் நீ மறுபடியும் இப்படி செய்கிறாய். இன்று இரவு நான் உன் வீட்டிற்கு வருகிறேன். உன் குடும்பத்தினரிடம் சொல்கிறேன் என மிரட்டுகிறார்.
கோபி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, எதாவது செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார்.எழில் புதிதாக படம் எடுக்க திட்டமிட்டு தயாரிப்பாளரை சந்திக்கிறார். அப்போது ஒரு நடிகர் நடிக்கமாட்டேன் என்று சொல்கிறார். இந்த படத்தை எப்படியாவது நிறுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என எழில் கவலைப்படுகிறார்.
கோபி தெரிந்த போலீசை அழைத்து ராஜேஷ் பற்றி புகார் அளிக்கிறார். லோன் வாங்கிவிட்டு ஒருவன் என்னை பெண்கள் விஷயத்தை சொல்லி மிரட்டுகிறார். நானும் எவ்வளவோ சமாளித்தேன் ஆனால் என்னால் முடியவில்லை என்று சொல்கிறார். நீங்கள் பெண்கள் விஷயத்தில் எவ்வளவு நல்லவர் என்று எனக்கு தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். கோபி அப்போது தான் நிம்மதி அடைகிறார்.
அதன் பின்னர் எழில் பாக்கியாவிற்கு போன் செய்து இனியாவை ஸ்கூலில் இருந்து கூட்டிக் கொண்டு வர முடியாது வேலை இருக்கிறது என்று சொல்கிறார். தாத்தா அல்லது ஜெனியை அனுப்பி கூட்டிக் கொண்டு வர சொல்லுங்கள் என்று சொல்கிறார். சரி என்று பாக்கியா போனை வைக்கிறார். கோபிக்கு போன் செய்து இனியாவை ஸ்கூலில் இருந்து அழைத்து வரும்படி சொல்கிறார். சரி என்று கோபி சொல்கிறார். ஆனால் சீக்கிரமாக சென்று காத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!