நகை அடகு வைத்து பணம் ஏற்பாடு செய்யும் பாக்கியா, இனியாவை சந்திக்கும் கோபி – இன்றைய எபிசோட்!

0
நகை அடகு வைத்து பணம் ஏற்பாடு செய்யும் பாக்கியா, இனியாவை சந்திக்கும் கோபி - இன்றைய எபிசோட்!
நகை அடகு வைத்து பணம் ஏற்பாடு செய்யும் பாக்கியா, இனியாவை சந்திக்கும் கோபி - இன்றைய எபிசோட்!
நகை அடகு வைத்து பணம் ஏற்பாடு செய்யும் பாக்கியா, இனியாவை சந்திக்கும் கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், சந்துரு ராதிகாவிடம் கோபியை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா இனியாவின் பீஸ் கட்ட பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். பின் கோபி இனியா ஸ்கூலிற்கு வந்து பணம் கட்டுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், சந்துரு ராதிகாவிடம் என்ன யோசிக்கிறாய் என கேட்க உடனே ராதிகா நான் கோபியை பார்த்தேன் என சொல்கிறார். கோபியை பார்த்தியா அவரிடம் பேசுனியா என கேட்க இல்லை நான் என்ன அவரிடம் பேச என ராதிகா சொல்கிறார். அவரே வீட்டை விட்டு வெளியே வந்து ஹோட்டல் ரூமில் தங்கி இருப்பதாக சொல்ல, ஹோட்டல் ரூமில் தங்கி இருக்காரா அந்த பாக்கியா சரியான ராட்சசியாக இருப்பாள் போல என ராதிகாவின் அம்மா சொல்கிறார். எனக்கே குற்ற உணர்ச்சியாக இருப்பதாக ராதிகா சொல்ல, நீ என்ன செய்தாய் ஏற்கனவே அங்கே பிரச்சனை இருக்கும் போல என ராதிகாவின் அம்மா சொல்கிறார்.

நல்லதோ கெட்டதோ இருவரும் ஆசை பட்டுவிட்டீர்கள் கோபியை கல்யாணம் செய்வதில் உனக்கு என்ன பிரச்சனை என ராதிகாவின் அம்மா கேட்க சந்துரு அதான் சரி என சொல்கிறார். கோபி இவளை நம்பி விவாகரத்து வாங்கினால் இவளும் இப்படி செய்கிறாள் என தோன்றும் என சொல்ல, ராதிகாவின் அம்மா நன்றாக யோசிக்க சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா பணத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார் அப்போது அமிர்தா பாக்கியாவை பார்க்க வருகிறார். அமிர்தா நடந்ததை எல்லாம் எழில் சொன்னார் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. அதனால் பார்த்துவிட்டு போகலாம் என வந்தேன் உங்க மனது எந்த அளவிற்கு வருத்தப்பட்டிருக்கும், ஆனால் நீங்க எடுத்த முடிவு ரொம்ப உறுதியான முடிவு என அமிர்தா சொல்கிறார்.

இனிமேல் தான் என் வாழ்க்கையை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என பாக்கியா சொல்ல, அமிர்தா இனிமேல் உங்க வாழ்க்கை நன்றாக இருக்கும் என சொல்கிறார். பின் அமிர்தா கிளம்பி விட செல்வி பணம் வசூலித்துவிட்டு வருகிறார். என்னாச்சு என பாக்கியா கேட்க நீ கொடுத்த லிஸ்ட் படி 17000 ரூபாய் வர வேண்டும் ஆனால் வெறும் 5000 ருபாய் தான் வசூல் ஆனது என செல்வி சொல்கிறார். நானும் கேட்டு பார்த்தேன் கொடுக்கவில்லை என செல்வி சொல்ல, இப்போ என்ன செய்வது இனியா காத்துக் கொண்டிருப்பாள் என பாக்கியா சொல்கிறார். பின் பாக்கியா எப்படியாவது ஒரு 15000 ரூபாய் கிடைக்கும் என நினைத்தேன் சும்மாவே இனியா என் மீது கோவமாக இருக்கிறாள் என பாக்கியா சொல்கிறார்.

மறுபக்கம் ப்ரொடியூசர் எழிலை அழைத்து கதையில் மாற்றம் செய்துவிடீர்களா என கேட்கிறார். எழில் அதை மட்டும் மாற்றவில்லை என சொல்ல, அதை மாற்றினால் மொத்த கதையும் மாறிவிடும். உங்களுக்கே தெரியும் கதை நன்றாக வந்திருக்கிறது. ஆனால் இப்போது மாற்றினால் எல்லாம் மாறிவிடும் என எழில் சொல்கிறார் உடனே கோவப்பட்ட ப்ரொடியூசர் முதல்படம் ஓடி விட்டது என்ற தைரியத்தில் பேசுறீங்க என சொல்கிறார். உங்களுடைய வயசு தான் என் அனுபவம் என சொல்கிறார். கதையை எப்படி மாற்ற முடியும் என எழில் கேட்க, ப்ரொடியூசர் நான் சொன்னதை மாற்றவில்லை என்றால் நான் இந்த படத்தை தயாரிக்கமாட்டேன் என சொல்கிறார். எழில் ஏன் இப்படி பேசுறீங்க என கேட்க, ப்ரொடியூசர் கதையை மாற்ற ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க என கோவமாக பேசுகிறார்.

பின் பாக்கியா தெரிந்தவர்களிடம் பணம் கேட்க ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. உடனே செல்வி இந்த பணக்காரர்களே இப்படி தான் என சொல்ல, பாக்கியா பணத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் வளையலை கழட்டி கொடுத்து செல்வியை அடகு வைத்து வர சொல்கிறார். செல்வி ஏன் அக்கா என கேட்க, இதை தவிர வேறு வழி இல்லை என பாக்கியா சொல்கிறார். செல்வியும் வளையலை வாங்கி கொண்டு செல்கிறார். பின் கோபி ஸ்கூலில் இனியாவை பார்க்க செல்ல, இனியா டாடி என சந்தோசமாக ஓடி வந்து அழுகிறார்.

தமிழகத்தில் அரசு சார்பில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் – முக்கிய தகவல் இதோ!

கோபி அழாதே மா டாடி வந்துவிட்டேன் நீ ஏன் அழுகிறாய் என கேட்கிறார். என்ன டாடி இப்படி இருக்கீங்க உங்க முகம் வருத்தமாக இருப்பதாக சொல்ல அதெல்லாம் இல்லை நான் நன்றாக இருக்கேன் என கோபி சொல்கிறார். ஆனால் உன்னை பார்க்காத வருத்தம் தான் என கோபி சொல்ல, இனியா நானும் உங்களை பார்க்காமல் வருத்தமாக இருப்பதாக சொல்கிறார். நான் நான்றாக தான் இருக்கேன் நீ நன்றாக இருக்க வேண்டும் என கோபி சொல்கிறார். பின் எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம் எல்லாத்தையும் சரி செய்வது போல பேசுவாங்க ஆனால் செய்யவில்லை,

இன்னைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட கடைசி நாள் ஆனால் அம்மா வரவில்லை என அழ உடனே கோபி அழாதே எனக்கு மெசேஜ் வந்ததும் அதான் வந்து கட்டினேன் என கோபி சொல்கிறார். இனியா பீஸ் கட்டிடீங்களா என கேட்க ஆமாம் என கோபி சொல்கிறார். நீ என் பொண்ணு உனக்கு நான் கட்டாமல் யார் செய்வார் என கோபி கேட்கிறார். பின் இனியா உங்களுடன் நானும் வந்துவிடுகிறேன் என சொல்ல, கண்டிப்பாக நான் கூட்டிக் கொண்டு செல்கிறேன் என சொல்கிறார். ஆனால் இனியா நான் இப்பவே வருவேன் என சொல்ல, இப்போ நான் ஹோட்டலில் இருப்பதாக கோபி சொல்லி இனியாவை அனுப்பி வைக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!