பாக்கியாவை வீட்டில் இருக்க சொல்லும் இனியா, மனதை மாற்றிக் கொள்ள சொல்லும் ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி பாக்கியாவை வெளியே போக சொல்ல எழில் அவங்களுடைய பொருள்களை எடுக்க வந்ததாக சொல்கிறார். பின் இனியா எனக்கு அம்மா வேண்டும் என கெஞ்சுகிறார். ஈஸ்வரி பாக்கியாவின் முடிவை மாற்றிக் கொள்ள சொல்லி கெஞ்சுகிறார்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி இங்கே எதற்கு வந்தாய் இனிமேல் உனக்கு இந்த வீட்டில் இடமில்லை என பாக்கியாவிடம் சொல்ல, எழில் அவங்களுடைய பொருள்களை எடுக்க வந்ததாக சொல்கிறார். பின் கோபி இங்கே இவளுடைய பொருள் எதுவும் இல்லை, எல்லாம் என் உழைப்பில் வாங்கியது என சொல்கிறார். எழில் இப்படியே பேசிக் கொண்டே இருங்கள் என சொல்லி பாக்கியாவை பொருள்களை எடுக்க போக சொல்கிறார். பாக்கியா எடுக்க செல்ல, என்னை பற்றி ஏன் நினைக்கவில்லை என இனியா அழுகிறார். நீ இருக்கும் போது எனக்கு அருமை தெரியவில்லை ஆனால் இப்போது நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் என இனியா சொல்கிறார்.
ஜெனி, நீங்க இங்கே தான் இருக்க வேண்டும் என அனைவரும் நினைக்கிறார்கள் என சொல்ல, தாத்தா பாக்கியா பக்கம் நியாயம் இருக்கிறது அவள் இங்கே தான் இருக்க வேண்டும் புள்ளைகளுக்கு அம்மாவாக இந்த வீட்டின் மருமகளாக இருக்க வேண்டும் என சொல்ல ஈஸ்வரி அது அவளுக்கு புரிய வேண்டும் என சொல்கிறார். அவளுக்கு புரிந்து தான் முடிவு எடுத்து இருப்பதாக சொல்ல, செழியன் அம்மாவிற்கு சப்போர்ட் செய்யாதீங்க என சொல்கிறார். ஈஸ்வரி நீ அவளுக்கு அட்வைஸ் செய்யாதே என சொல்கிறார். எழில் பாக்கியாவை ட்ரெஸ் எடுத்துக் கொண்டு வர சொல்ல, இனியா வேண்டாம் என சொல்கிறார். ஜெனியும் செழியனும் முடிவை மாற்றிக் கொள்ள சொல்லி கெஞ்சுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
உடனே கோபி போதும் நிறுத்துங்கள் இவளிடம் பிச்சை கேட்குறீங்களா என்னுடன் வந்து வாழு என கெஞ்சுறீங்களா அதற்கு இனிமேல் அவசியம் இல்லை, எப்போது கோர்ட் சென்று விவாகரத்து வாங்கினாலோ அவளுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை இந்த நிமிஷம் கூட இவ இங்கே இருக்க கூடாது. இவள் இல்லை என்றால் இந்த குடும்பம் இருக்காதா, இவள் இத்தனை வருஷம் சமையல் வேலை மட்டும் தான் செய்தால், செல்விக்கும் இவளுக்கும் வித்தியாசம் இல்லை. 5000 ருபாய் கொடுத்தால் இவள் செய்த வேலையை செய்ய ஆள் கிடைக்கும் என கோபி சொல்ல பாக்கியா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
இதற்கு மேல் ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க வேண்டாம் என எழில் சொல்ல, பாக்கியா மாடிக்கு சென்று ட்ரெஸ் எடுக்க போகிறார். பின் ஈஸ்வரி செல்வியை அறிவுரை சொல்லலாமே என சொல்ல கோபி அவள் எடுத்த முடிவுக்கு இவளும் ஒரு காரணம் என சொல்கிறார். பின் நீ இப்படியா முடிவெடுத்து இருப்பாய் என சொல்ல ஆமாம் என செல்வி சொல்கிறார். பின் செல்வி சுயமரியாதை முக்கியம் என சொல்ல. எழில் நல்லா சொல்லுங்க என சொல்கிறார். அப்போது செழியன் நீ அமைதியாக இரு நீ இருப்பதால் தான் அம்மா ஆட்டம் போடுவதாக சொல்ல, என்னது எந்த வசதியும் இல்லாமல் அலுவலகத்தில் தங்குவது ஆட்டம் போடுவதா. அப்போ இவர் செய்வது என்ன என கேட்கிறார்.
இன்னும் எத்தனை நாள் இதை சொல்வாய் என செழியன் கேட்க கடைசி வரை சொல்வேன் என எழில் சொல்கிறார். இவர் தான் நமக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். நீ இவர் போலவே செய்வியா என கேட்க, ஜெனி இருவரையும் அமைதியாக இருக்க சொல்கிறார். பின் பாக்கியா கிளம்பி பெட்டியுடன் வருகிறார். இனியா பாக்கியாவை தடுத்து நிறுத்த, நீ ஏன் இப்படி எல்லாம் செய்கிறாய் என கேட்கிறார். டாடி தவறு செய்தால் என்னை ஏன் விட்டு போகிறாய் என இனியா கேட்கிறார். இனியாவை கோபி கெஞ்ச வேண்டாம் என சொல்கிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை – பிரதமர் வெளியீடு!
இனிமேல் உனக்கு அப்பா நான் இருக்கிறேன் என சொல்ல, தாத்தா ஒரு வயசுக்கு வந்த பெண்ணிற்கு எல்லாம் நீ செய்துவிடுவியா என கேட்கிறார். ஆமாம் டாடி அம்மா இல்லாமல் இருக்க முடியாது எனக்கு மட்டுமில்லை தாத்தா பாட்டி என அனைவருக்கும் அம்மா வேண்டும் என இனியா சொல்கிறார். இனியா பாவம் என ஈஸ்வரி சொல்ல இதெல்லாம் என்னிடம் எதற்கு சொல்ல வேண்டும், நான் ஒன்றும் வீட்டை விட்டு போறேன் என பெட்டி உடன் வந்து நிற்கவில்லை. இனியா இனிமேல் இவளுக்கு இந்த வீட்டில் இடமில்லை. அம்மா வேண்டும் என நீ நினைக்காமல் வேலையை பாரு என சொல்கிறார். இனிமேல் இந்த வீட்டில் இவளுக்கு இடமில்லை என கோபி சொல்ல, நாங்க இத்தனை பேர் சொல்கிறோம் மரியாதை இல்லையா என ஈஸ்வரி பாக்கியாவிடம் கேட்கிறார்.