எழில் உடன் ஹோட்டல் சென்று சாப்பிட்ட பாக்கியா, விவாகரத்து பற்றி வீட்டில் சொன்ன கோபி – இன்றைய எபிசோட்!

0
எழில் உடன் ஹோட்டல் சென்று சாப்பிட்ட பாக்கியா, விவாகரத்து பற்றி வீட்டில் சொன்ன கோபி - இன்றைய எபிசோட்!
எழில் உடன் ஹோட்டல் சென்று சாப்பிட்ட பாக்கியா, விவாகரத்து பற்றி வீட்டில் சொன்ன கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா, எழிலை ஹோட்டலிற்கு அழைத்து சென்று பிடித்தது எல்லாம் வாங்கி கொடுக்கிறார். பாக்கியா நீண்ட நாள் கழித்து நிம்மதியாக சாப்பிடுகிறார். மறுபக்கம் கோபி விவாகரத்து வாங்கியது பற்றி சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா “இனிமேல் அம்மா அப்பா சேரமாட்டார்களா, அப்போ இந்த வீட்டில் யார் இருப்பா அம்மாவா அப்பாவா” என கேட்க, தாத்தா அப்படி எல்லாம் ஆகாது உன் அம்மா கோவத்தில் அங்கே சென்று இருப்பாள், அப்படி திடீரென முடிவு எடுக்கமாட்டாள் என சொல்ல, செழியன் “பாட்டி ராதிகா வீட்டிற்கு போன போது நாம கோர்ட்டிற்கு சென்றுவிட்டு வரலாம்” என சொல்கிறார். பின் பாட்டி, இந்த வீட்டில் யாரும் என் பேச்சை கேட்பதில்லை என கோபப்படுகிறார். மறுபக்கம் எழில் பாக்கியாவை ஹோட்டலிற்கு அழைத்து வருகிறார். என்ன சாப்பிடுகிறாய் என கேட்க பாக்கியா மெனு கார்டை கேட்கிறார்.

அப்போது மெனு கார்டை பார்த்து பாக்கியா பிடித்ததை எல்லாம் ஆர்டர் செய்கிறார். பாக்கியா ஆர்டர் செய்வதை பார்த்து எழில் அசத்துகிறாய் என சொல்கிறார். எல்லாரும் கல்யாண நாளுக்கு தான் டிரீட் வைப்பார்கள், உன்னை பார்த்தால் சந்தோசமாக இருக்கிறது என எழில் சொல்கிறார். பின் ஆர்டர் செய்த உணவுகளை கொண்டு வருகின்றனர். பின் கோபி வீட்டிற்கு வர, அம்மா எங்கே என இனியா கேட்கிறார், செழியன் என்ன சொன்னார்கள் என கேட்க, கோபி எதுவும் பேசாமல் இருக்கிறார். ஈஸ்வரி என்ன ஆச்சு என கேட்க கோபி உங்க மருமகள் விவாகரத்து வாங்க ஒப்புக் கொண்டால் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

எந்த பதட்டமும் இன்றி நீதிபதி முன் நின்று எனக்கு விவாகரத்து கொடுக்க சம்மதம் என சொல்லிவிட்டாள் என கோபி சொல்கிறார். ஈஸ்வரி, நிஜமாகவே விவாகரத்து கொடுத்துவிட்டாளா? நீ சொல்வது உண்மை தானா? என கேட்க ஆமாம் என கோபி சொல்கிறார். அவளுக்கு உடம்பு முழுவதும் திமிரு அவளுக்கு கொஞ்சம் கூட பயம் இல்லை என கோபி சொல்கிறார். அவள் இந்த நிமிடத்திற்காக தான் காத்துக் கொண்டிருந்தது போல் பேசினாள் என சொல்ல, ஜெனி நீங்க வருவதற்கு முன் கூட இப்படி எல்லாம் நடக்காது என நாங்க நினைத்தோம் என சொல்ல, அவள் இன்னொரு வாழ்க்கைக்கு தயாராகிவிட்டாள் என கோபி சொல்கிறார்.

பின் தாத்தா நீ செய்த தவறிற்கு அவள் மீது பழி போடாதே என சொல்ல, ஈஸ்வரி ஒரு குடும்ப பொம்பளை இப்படி செய்யலாமா? என கேட்கிறார். இனியா, டாடி இனிமேல் அம்மா வரமாட்டாங்களா? என கேட்க, இனியா உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் விட்டுவிட்டு போனவர்களை பற்றி கவலைப்படாதே என கோபி சொல்கிறார். தாத்தா, எழில் எங்கே என கேட்க அவன் அம்மா உடன் இருக்கிறான் என சொல்கிறார். எழில் வீட்டிற்கு வந்துவிடுவான் என கோபி சொல்ல, இனிமேல் அவள் இந்த வீட்டிற்கு வர தேவை இல்லை என கோபி சொல்கிறார். இப்படி சொன்னால் எப்படி என செழியன் சொல்ல, அவள் நானும் வேண்டாம் இந்த வீட்டில் இருக்கும் யாரும் வேண்டாம் என முடிவு செய்துவிட்டாள்.

இன்று முதல் அவள் எனக்கு பொண்டாட்டி இல்லை, அதனால் இந்த வீட்டில் இருந்து யாரும் அவளுடன் பேச கூடாது என சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா ஆர்டர் செய்த உணவுகளை ருசித்து சாப்பிடுகிறார். மறுபக்கம் ராதிகாவின் அம்மா, கோபி இப்படி சொல்லிவிட்டு போகிறார், உண்மையாகவே பாக்கியாவிடம் விவாகரத்து வாங்கிருப்பாரா என கேட்க தெரியவில்லை அவர் சொன்னதை நம்ப முடியாது என ராதிகா சொல்கிறார். பின் சந்துரு, கோபி பொய் சொல்ல வாய்ப்புள்ளதாக சொல்ல, ராதிகா என்னால் நம்பவே முடியாது என சொல்கிறார். பின் ராதிகாவின் அம்மா என்ன தைரியம் என கேட்க, ராதிகா அவங்க இப்படி முடிவு எடுக்க வாய்ப்பில்லை என சொல்கிறார்.

விவாகரத்து ஆன கையோடு பாக்கியாவை வீட்டை விட்டு துரத்திய கோபி – அடுத்து வரும் ட்விஸ்ட்!

அந்த அம்மாவும் தயாராக இருந்து இருக்கிறது என சந்துரு சொல்ல, அப்படி எல்லாம் இருக்காது என ராதிகா சொல்கிறார். யாரு உண்மை சொல்கிறார், பொய் சொல்கிறார் என்பதை தாண்டி அவங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது அப்பறம் என்ன முடிவு எடுக்க வேண்டியது ராதிகா தான் என சொல்கிறார். கோபி பொண்டாடி பற்றி சொன்னது எல்லாம் உண்மையாக தான் இருக்கும் அதனால் தான் விவாகரத்து வாங்கிவிட்டார்கள் என சந்துரு சொல்கிறார். பின் ராதிகா, இந்த விவாகரத்து பொய்யாக இருக்குமா? என கேட்க சந்துரு, கோபி உன்னை தேடி வர வேண்டும் என ஆசை இருந்தது என சொல்ல, ராதிகா வக்கீலிடம் போன் செய்து விவாகரத்து பற்றி கேட்கிறார். வக்கீல் இந்த கேஸ் முடிந்துவிட்டதாக சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!