கலைகட்டும் ராதிகா & கோபி திருமண ஏற்பாடுகள், அதிர்ச்சி நிறைந்த ப்ரோமோ – பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவின் தற்போதைய முடிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், சீரியலில் பாக்கியா குடும்பத்தினரின் எதிர்ப்பை தான் சம்பாரித்து உள்ளனர். இந்நிலையில், சீரியலில் புது வித ட்விஸ்ட் ஒன்று வரவிருக்கிறது.
கோபியின் திருமணம்:
ராதிகாவிடம் கோபி இனியாவின் ஸ்கூலில் பார்க்கும் போது, தன்னுடன் வாழ சம்மதமா?இல்லையா என்று கேட்கிறார். அதற்கு ராதிகா சம்மதம் தான் ஆனால் தனக்கு சிறிது அவகாசம் வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்புகிறார். ராதிகாவின் அம்மாவும், அண்ணன் சந்துருவும் இது பற்றி பேசும் போது ராதிகா இப்படியே விட்டால், கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டார். அதனால், கோபியிடம் சொல்லி திருமண ஏற்பாடுகளை செய்ய சொல்கிறார். இதனால் சந்துருவும் கோபியை நேரில் சந்தித்து திருமண ஏற்பாடுகளை ஆரம்பிக்கிறார்.
திடீரென்று திருமணம் என்று சொன்னதால் ராதிகாவும் மறுப்பு ஏதும் சொல்லாமல் சம்மதிக்கிறார். கோபி, தனது திருமணத்தில் பாக்கியாவை கலந்து கொள்ள அழைக்கிறார். இதனால், பாக்கியா மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறார். என்ன தான் கோபிக்கு பிடிக்காமல், அவருடன் வாழ விருப்பம் இல்லை என்று சொல்லி பாக்கியா விவாகரத்து கொடுத்து விட்டாலும், அவரை நினைத்து கவலைப்படத்தான் செய்கிறார். கோபியின் திருமணத்திற்கு இனியா செல்ல சம்மதிக்கிறார்.
Post Officeல் சூப்பரான சேமிப்பு திட்டங்கள் அறிமுகம் – முழு விவரம் இதோ!
இன்னொரு புறம், ராதிகாவின் திருமணம் குறித்து கேள்விப்பட்டு, ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ் திருமணத்தில் வந்து பிரஸாஹனை செய்கிறார். அவரை சந்துரு தான் சமாளித்து அனுப்பிவைக்கிறார். மேலும், கோபி இந்த திருமணத்தில் ஈஸ்வரி அம்மா கலந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் ஈஸ்வரி அம்மாவிடம் வந்து கெஞ்சி திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறார். ஆனால் ராமமூர்த்தி தாத்தா ஈஸ்வரியை திருமணத்திற்கு செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். அவரை எதிர்த்து ஈஸ்வரி அம்மா கோபி மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கு செல்வாரா என்று அதிர்ச்சி நிறைந்த காட்சிகள் இனி வர உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்