கோபிக்கு முழுக்கு போட்ட சீரியல் குழு.. கதையின் அடுத்த நகர்வு இதுதான் – ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவி தொடரான பாக்கியலட்சுமியில் தற்போது வரை கோபியின் காட்சிகள் தான் அதிகம் காட்டப்பட்டு வருகிறது. ஆனால் இனி கதைக்களம் மாற உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பாக்கியாவை வெறுப்பேற்ற வேண்டும் என்றே கோபி ராதிகாவுடன் பக்கத்து வீட்டிற்கு குடி வந்துள்ளார். ஆனால் அதனால் கோபியின் நிம்மதி தொலைந்தது தான் மிச்சம். ராதிகா அதை வைத்தே பாக்கியாவை பார்த்து பார்த்து சண்டை போடுகிறார். ஏற்கனவே கோபி ராதிகா சாப்பாடை நினைத்து புலம்பி வேறு வருகிறார்.
Follow our Instagram for more Latest Updates
மறுபுறம் ஜெனி அடுத்து கர்பமாக இருக்கும் சந்தோஷ செய்தியை வீட்டினருக்கு சொல்ல உள்ளார். இந்நிலையில் எழிலின் ஜோடியாக அமிர்தா ரோலில் நடிக்கும் ரித்திகா பாக்கியலட்சுமி தொடரின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு இருக்கும் என்று தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் கூறியுள்ளார். அதாவது இனி வரும் டிசம்பர் மாதத்தில் எழில் அமிர்தாவின் காட்சிகள் தான் அதிகம் இருக்குமாம்.
Exams Daily Mobile App Download
ஏற்கனவே அமிர்தாவின் மாமனார், மாமியார் திருமணம் பற்றி எழிலிடம் கேட்டு விட்டனர். எனவே அடுத்து எழில் அமிர்தாவின் திருமண எபிசோடுகள் வர உள்ளன. ஆக மொத்தம் இவ்வளவு நாள் கோபியின் காட்சிகள் மட்டுமே காட்டப்பட்டு வந்த நிலையில் புது திருப்பம் அரங்கேற போகிறது.