தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிஏ 2 வைரஸ் தொற்று எதிரொலி!
ஓமிக்ரான் வைரஸ் தொற்றிலிருந்து உருமாற்றம் அடைந்த “பிஏ 2” வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த 2021 டிசம்பர் மாதம் பரவிய ஓமிக்ரான் வைரஸ் தொற்று மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. இந்த நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி மாநிலம் முழுவதும் இரவு நேர மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் உணவகங்கள், அழகு நிலையங்கள், விடுதிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசின் முயற்சியால் கொரோனா தாக்கம் குறைய ஆரம்பித்ததும் அரசு பொதுமக்கள் நலன் கருதி ஊரடங்கை ரத்து செய்தது. அதனால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நேரத்தில் ஓமிக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த “பிஏ 2” வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது அதிக வேகமாக பரவக் கூடியது என்றும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்றும் ஜப்பான் நாட்டைைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கில் தளர்வுகள் – மத்திய அரசு அறிவுறுத்தல்!
அதனை தொடர்ந்து இந்த வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படும் என்ற தகவல் வந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று ஒமைக்ரான் வைரஸ் தொற்றைப் போல், இந்தியாவுக்குள் பரவும் பட்சத்தில் தமிழகத்தில் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது இரவு நேர ஊரடங்கு பொது இடங்களில் நேர கட்டுபாடு போன்றவை விதிக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் பிஏ 2 வைரஸ் தொற்றின் தீவிரத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.