இந்தியாவில் ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்’ திட்டம் – பிரதமர் மோடி தொடக்கம்!
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
புதிய திட்டம்:
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் உடல் நலத்தை பேணி காக்கும் எண்ணத்தை கருத்தில் கொண்டு நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சுகாதார அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது . இதன் அடிப்படையில் சுகாதார அடையாள அட்டை வழங்கும் ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்’ திட்டத்தை பற்றியும், அத்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் என்பது பற்றியும் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று செங்கோட்டை கொத்தளத்தில் உரையாற்றியுள்ளார்.
அக்.1 முதல் பள்ளிகள் முழுவதுமாக திறப்பு – மதிய உணவு திட்டம் துவக்கம்!
தற்போது இத்தகைய ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்’ திட்டம் 6 யூனியன் பிரதேசங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் அறிவித்தார். ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு 3 ஆண்டுகள் முடிவடைந்ததை கொண்டாடும் நிலையில் இன்று இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் சுகாதார அட்டை வழங்கும் ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் அக்.1 வரை இம்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
இத்தகைய அடையாள அட்டையில் அனைத்து மக்களின் சுகாதார நிலையை உள்ளடக்கி வழங்கப்படுவதாகவும், சுகாதார கணக்கு என்பதன் அடிப்படையில் இதனை மொபைல் செயலி மூலம் இயக்கி கொள்ள முடியும் என்றும் சுகாதார அடையாள அட்டை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.