தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மே 1 முதல் அமல்!!
ஆக்ஸிஸ் தனியார் வங்கி வடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கான SMS மற்றும் மினிமம் பேலன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஸ் பேங்க் அறிவிப்பு:
ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் குறைந்தபட்ச தொகை 10,000 ரூபாய் தொகைக்கு பதிலாக தற்போது 15,000 ரூபாய் அதிகாமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரைம் மற்றும் லிபர்டி சேவிங்ஸ் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்ச தொகையாக ரூ.15000 இருந்து ரூ.25000 ஆக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் வழங்கப்படும் அபராத தொகை ரூ.150 இல் இருந்து ரூ.50 ஆக குறைந்துள்ளது. அதிகபட்ச கட்டணம் என்பது ரூ.600 இல் இருந்து ரூ.800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் கட்டணம் இல்லாமல் 4 முறை வேறு வங்கி ஏடிஎம்.,களில் பணம் எடுத்து கொள்ளலாம். அதற்கு பின் பணம் எடுக்கும் போது ஆயிரம் ரூபாய்க்கு ரூ.10 என வசூலிக்கப்படும். அதில் அதிகபட்சமாக ரூ.150 வசூலிக்கப்படும். இந்த தொகை ஏற்கனவே ரூ.5 ஆக இருந்தது.
ஒரே நாளில் 3.60 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி – மத்திய சுகாதாரத்துறை!!
ஏற்கனவே எஸ்எம்எஸ் அலர்ட்களுக்கு முன்னதாக மாதம் ரூ.5 வசூலிக்கப்பட்டது. தற்போது ஒரு SMSக்கு 25 பைசாவாகவும், அதிகபட்சம் 25 ரூபாய் வரை வசூலிக்கப்படும். இந்த SMS மாற்றங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒன் டைம் பாஸ்வேர்டுகளுக்கு (OTP) பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Frad bank he is cheetted middle class People