தமிழக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊர்தி – முதல்வர் துவக்கி வைப்பு!
சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விழிப்புணர்வு ஊர்தி:
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாமல் இருந்த நிலையில் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். சமீபத்தில் பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளும் பரவத் தொடங்கி இருக்கிறது. அதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது
LPG கேஸ் சிலிண்டருக்கான மானியம் எப்போது? மத்திய அமைச்சர் விளக்கம்!
அதன் படி சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு தொடக்க விழா மற்றும் அது தொடர்பான வாகனங்கள் தொடக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லால் உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிகழ்ச்சி மூலமாக மருத்துவக் குழுவினர் அடங்கிய 805 விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் குறித்து விழிப்புணர்வு தரப்பட உள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு தேர்வு குறித்த அச்சம் மன ரீதியான அழுத்தங்களை எதிர்கொள்ள ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து பள்ளிகளில் மருத்துவ முகாம் நடைபெறும் போது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களும் வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.