தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்களின் தற்கொலை செய்தி பரவி வரும் நிலையில் அது குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனம் உருகி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அமைச்சர் பேட்டி:
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவியின் இறப்பு இன்னும் மக்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அதில் எந்த நியாயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் தலைமையில் பள்ளி மாணவர்களின் உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு விழா நடைபெற்று வருகிறது.
பள்ளிகளில் ஆரம்ப பள்ளி சேர்க்கை வயது உயர்வு – முக்கிய உத்தரவு வெளியீடு!
சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லால் உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், மாணவியின் மரணம் காரணமாக இறுக்கமான மனநிலையில் தான் இருக்கிறேன் என வருத்தத்துடன் பேசினார்.
Exams Daily Mobile App Download
மேலும் பேசிய அவர் கொரோனா காலத்திற்கு பின் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றனர். மாணவர்களின் கல்விக்காக பல முயற்சிகளை அரசு எடுத்துள்ளது. ஆனால் மனநிலையை சரி செய்வது என்பது மருத்துவர்கள் வழங்கும் விழிப்புணர்வுகளில் தான் இருக்கிறது. பள்ளி மாணவியின் இறப்பு காரணமாக இறுக்கமான மனநிலையில் தான் இருக்கிறேன் என வருத்தமாக பேசி இருக்கிறார். மாணவர்களின் மதிப்பெண்கள் அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்காது. ஒரு குழந்தையின் இறப்பால் 3000 குழந்தைகள் படிப்பு போய் விடுகிறது. அதை பற்றி தான் நான் நினைக்க வேண்டும் என வருத்தப்பட்டு பேசி இருக்கிறார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்