தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு – அரசு எடுத்துள்ள புதிய முயற்சி!!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு - அரசு எடுத்துள்ள புதிய முயற்சி!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு - அரசு எடுத்துள்ள புதிய முயற்சி!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு – அரசு எடுத்துள்ள புதிய முயற்சி!!

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு மாணவர்கள் மத்தியில் இடை நிற்றல் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. தற்போது இந்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

மாணவர்களுக்கான நலத்திட்டங்கள்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி கல்வியை விட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர். இதனால் தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் இடை நிற்றல் என்பது அதிகரித்து கொண்டே இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. மேலும் ஏராளமான மாணவர்கள் காலையில் உணவு அருந்தாமல் பள்ளிக்கு வருகின்றனர்.

இதனால் மாணவர்களுக்கு அதிகளவு நோய் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி நடப்பு ஆண்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து குடும்ப வறுமை காரணமாக பெரும்பாலான மாணவிகள் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு உயர்கல்வி படிப்பை தொடர முடியாமல் உள்ளனர்.

குறைந்த விலையில் அறிமுகமாகும் ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப் – அம்பானியின் சூப்பர் திட்டம்!

Exams Daily Mobile App Download

அதனால் உயர்கல்வியில் மாணவிகள் சேர்ந்து படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டமானது தற்போது “புதுமைப்பெண் திட்டம்” என்ற பெயரில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது இந்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது. அதாவது சென்னை மாநகர பேருந்துகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!