Tokyo Paralympics 2020: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவானி !!
டோக்கியோவில் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி லெஹரா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸில் :
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இந்திய அணி சார்பில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் சீனா இடையிலான துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டி நடைபெற்றது.
“நான் தான் லட்சுமியின் அம்மா என்ற” உண்மையை சொன்ன கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
அதில் இந்திய அணி சார்பில் அவானி லெஹரா மற்றும் சீன அணி சார்பில் க்யூபிங் ஜாங் போட்டியிட்டனர். அதில் அவானி 249.6 புள்ளிகள் எடுத்து உலக சாதனை படைத்து தங்க பதக்கம் பெற்றுள்ளார். சீனாவின் க்யூபிங் ஜாங் 248.9 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். மேலும் உக்ரைன் நாட்டின் இரினா 227.5 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார். அதே போல நேற்று டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
ரேஷன் கடைகளில் அரிசியுடன் ராகி வழங்கும் புதிய திட்டம் – மாவட்ட ஆட்சியர்!
இந்நிலையில் பவினாவின் இந்த வெற்றி, டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் முதல் பதக்கமாக அமைந்துள்ளது. மேலும் பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா சார்பில் வெள்ளி வென்ற 2-வது வீராங்கனை என்ற பெருமையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இன்று தங்கம் வென்ற அவானிக்கு பாராலிம்பிக்ஸ் கமிட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் பாரா சூட்டிங் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வென்று கொடுத்த அவானிக்கு வாழ்த்துக்கள் என பாராலிம்பிக்ஸின் தலைவர் தீபக் மாலிக் தெரிவித்துள்ளார்.