Tokyo Paralympics 2020 – துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற அவனி லெகாரா, 2வது பதக்கம்!
டோக்கியோவில் நடைபெற்று வரும் 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகளில், இன்று (செப்டம்பர் 3) துப்பாக்கி சுடுதல் பிரிவில் கலந்து கொண்டு இந்தியாவுக்கான 2 ஆவது பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார் தங்க மங்கை அவனி லெகாரா.
பாராலிம்பிக் போட்டிகள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு இன்று (செப்டம்பர் 3) வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. கடந்த மாத இறுதியில் துவங்கி நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு விதமான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கத்தை குவித்து வருகின்றனர். ஆனால் நேற்றைய போட்டிகளில் எவ்வித பதக்கமும் கிடைக்கவில்லை.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் கூடுவதற்கு தடை – மாநில அரசு முடிவு!
இதை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகளில் 11 ஆவது நாளான இன்று (செப்டம்பர் 3), காலை துவங்கிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட வீராங்கனை அவனி லெகாரா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் 50மீ ரைபிள் பிரிவில் 445.9 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தை பிடித்து பாராலிம்பிக்கில் தனது 2 ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய பெண் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இப்போட்டியின் துவக்கத்தில் 149.5 என்ற கணக்கில் நான்காவது இடத்தை வகித்திருந்த அவனி, தொடர்ந்து போராடி தனது 30 ஆவது ஷாட்டில், 303.4 என்ற புள்ளிகளுடன் 6 ஆவது இடத்திற்கு முன்னேறினார். இறுதி கட்டத்தில் 445.9 புள்ளிகளை பெற்று 3 ஆவது இடத்தை வகித்த இவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். தற்போது 19 வயதான அவனி லெகாரா, பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம், இந்தியாவிற்கு தங்கம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.