ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால் – ரசிகர்கள் உற்சாகம்!
ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதி போட்டியில் இன்று ஸ்பானிஷ் நாட்டு டென்னிஸ் வீரர் ரபேல் நடால் இத்தாலிய ஏழாம் நிலை வீரரான மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதனால் ரபேல் நடால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:
உலக டென்னிஸ் போட்டியின் வீரர்களுக்கான தரவரிசையில் ரபேல் நடால் 6 வது இடத்தில் இருந்தார். சமீபத்தில் நடாலுக்கு காயம் ஏற்பட்டு டென்னிஸ் போட்டிகளில் விளையாட முடியவில்லை. காயம் சரியான பின்பு தற்போது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வருகிறார் . 2022 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கியது. இதில் அரையிறுதி சுற்று வரை முன்னேறிய ரபேல் நடால் இத்தாலி வீரரான மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு? அரசுக்கு கோரிக்கை!
21 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல இன்றைய அரையிறுதி போட்டியில் ரபேல் நடாழும் மேட்டியோ பெரெட்டிவும் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் ரபேல் நடால் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவ் அல்லது ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோருக்கு எதிராக நடால் வெற்றி பெற்றால், நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரருடன் சாதனையை முறியடித்து அதிக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை அடைவார்.
TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் – தேர்வர்கள் கவனத்திற்கு!
இன்று நடந்த போட்டியில் எட்டாவது ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் நடால் முதலில் நிதானமாக விளையாடினார். இரண்டு மணி நேரம் 55 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் முக்கியமான நேரத்தில் இடைவெளியை பெற்று பின்பு அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றார். ஜனவரி 30 ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறவுள்ளது. 35 வயதான டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இத்துடன் நடால் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.