ஜூலை 27 வரை 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – ஆஸ்திரேலியா அரசு!!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் பதிவாகி வருகிற காரணத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 27 வரை 7 நாட்களுக்கு நீடிக்கப்பட உள்ளதாக மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைய தொடங்கியது. மேலும் டெல்டா வைரஸ் தாக்கம் காரணமாக சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா பரவல் தாக்கம் பதிவாகி வருவதால் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீடிக்க உள்ளதாக விக்டோரியா மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கை – முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!
இதுகுறித்து அவர் கூறுகையில், மாநிலத்தில் கொரோனா வழக்குகள் மேலும் பதிவானால் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும். அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டு வருகிறோம். நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியா உள்ளது. நேற்று முன்தினம் புதிதாக 16 வழக்குகள் பதிவான நிலையில் தற்போது நேற்று புதிதாக 13 வழக்குகள் பதிவாகி உள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி இந்த மாநிலத்தில் உள்ளன. நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியுடன் ஐந்து வாரங்கள் பூட்டப்பட்ட நிலையில், மற்றும் விக்டோரியா மாநிலத்தில் டெல்டா வைரஸ் காரணமாக 5 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு இன்றோடு முடிவடைய இருந்த நிலையில், இன்று வெளியான அறிவிப்பின்படி, அங்கு ஜூலை 27ஆம் தேதி வரை அடுத்த 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.