தமிழகத்தில் ஆக. 31 விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் – விதிமுறைகள் வெளியீடு!

0
தமிழகத்தில் ஆக. 31 விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - விதிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் ஆக. 31 விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - விதிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் ஆக. 31 விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் – விதிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட எஸ்பி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி:

இந்தியாவில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தெருக்கள் எங்கும் வண்ண கோலங்கள், விநாயகர் சிலைகள் என்று திருவிழாவாக காட்சியளிக்கும். அதே போல தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும். அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே பெரிய விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெறும். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்றால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அம்மாவட்ட எஸ்பி சுதாகர் இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 501 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் முக்கிய விதிகளை எடுத்துரைத்துள்ளார். அவை பின்வருமாறு.

Exams Daily Mobile App Download

விதிகள்:

  • விநாயகர் சிலை வைக்க இடத்தின் உரிமையாளர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.
  • மின்வாரியம், தீயணைப்புத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
  • வழிபாடு செய்பவர்கள் முறையாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

வங்கிகளுக்கு செப்டம்பர் மாதம் 13 நாட்கள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

  • அரசு அனுமதி இல்லாமல் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யக் கூடாது.
  • வழிபாடு செய்யப்படவுள்ள விநாயகர் சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • வழிபாடு செய்யப்படும் இடத்திற்கு அருகில் அரசியல் மற்றும் மதத் தலைவர்களின் படங்கள் வைக்க கூடாது.
  • சிலை வழிபாடு செய்யும் இடத்திலோ அல்லது கரைக்கும் இடத்திலோ பட்டாசு வெடிக்க கூடாது.
  • விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் கரைத்துவிட வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!