தமிழகத்தில் இன்று 1,523 பேருக்கு கொரோனா உறுதி; 21 பேர் தொற்றினால் பலி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பின் தினசரி நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் படி, இன்று மட்டும் 1,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழக அரசு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கிற்கான கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டுள்ளது.
மாஸ்டர் செஃப் ஷோக்கு சிறப்பு விருந்தினராக வரும் பிரபல நடிகை – சேனலின் புது பிளான்!
அதன்படி, இன்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,13,360 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 34,899 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1,739 பேர் தொற்று பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் இதுவரை மொத்தம் 25,61,376 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 17,085 பேர் தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இன்று மட்டும் 1,50,948 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,21,66,911 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 183 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் தலைநகரில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,43,968 ஆக அதிகரித்துள்ளது.