தமிழகத்தில் இன்று 1,542 பேருக்கு கொரோனா பாதிப்பு; 27 மாவட்டங்களில் புதிய உயிரிழப்புகள் இல்லை – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மட்டும் 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை தாக்கம் கடந்த வாரங்களில் தினசரி பாதிப்பு 2,000 என்ற அளவில் இருந்து வந்தது. இந்த எண்ணிக்கை முந்தைய நாட்களை விட குறைவு தான் என்றாலும், கவனத்தில் கொள்ள வேண்டிய எண்ணிக்கையாகும். தமிழகத்தில் தொற்று பாதிப்பே இல்லை என்ற நிலையை அடைய தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பு பற்றிய முழு விவரங்களையும் தினமும் வெளியிட்டு வருகிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்க்கு கூடுதல் பொறுப்புகள் – குடியரசுத் தலைவர் உத்தரவு!
இன்றைய அறிக்கையின் படி, தமிழகத்தில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 26,08,748 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் மாநிலம் முழுவதும் 21 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்பினால் 34,835 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் தமிழகத்தில் 1,793 பேர் தொற்று பாதிப்பு குணடமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,56,116 ஆக உள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 17,797 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 4,16,90,759 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,62,487 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.