தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 26) மின்தடைக்கான பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 26) மின்தடைக்கான பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 26) மின்தடைக்கான பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 26) மின்தடைக்கான பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மின் விபத்துகளை தவிர்க்க துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. அதனால் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை (ஆக. 26) பெரம்பலூரில் நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை

தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. அத்துடன் இதனை பொதுமக்களுக்கு முறையாக அறிவித்து மின் வாரியம் செயல்படுத்தி வருகிறது.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – கலந்தாய்வு குறித்த தகவல் இதோ!

அந்த வகையில் நாளை பெரம்பலூரில் உள்ள தேனூர், கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (ஆக. 26) காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதனை தொடர்ந்து தேனூர், கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, ஆர்.எஸ்.மாத்தூர், கே.ஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு, புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஆக. 26) காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!