தமிழகத்தில் ஆக. 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய தகவல் வெளியீடு!

0
தமிழகத்தில் ஆக. 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் ஆக. 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் ஆக. 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய தகவல் வெளியீடு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஆகஸ்ட் 26 தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதனால் வேலைவாய்ப்பை தேடி வருவோர் இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு வேலைகள் கிடைக்காமால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவை கடந்த ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது பாதிப்புகள் சற்று குறைந்து வந்ததை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதம் தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 26ம் தேதி 4- வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Wipro, Infosys, TCS நிறுவன ஊழியர்கள் கொடுத்த அதிர்ச்சி – மீண்டும் ராஜினாமா? சம்பள குறைவு எதிரொலி!

Exams Daily Mobile App Download

இந்த முகாமில் ஒசூரில் அமைந்துள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொள்ள உள்ளது. இந்நிறுவனம் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 2021 – 2022-ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கலந்துக்கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 3 மாதம் பயிற்சியுடன் ரூ.15,000 ஊதியமும் வழங்கப்படும். அத்துடன் உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி செய்து தரப்படும். மேலும் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளும் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!