தமிழகத்தில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று; 27 பேர் பலி – தமிழக அரசு அறிக்கை!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த முழு அறிக்கையினை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 22 மாவட்டங்களில் புதிய உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு முழுவதுமாக ஓய்ந்து விடவில்லை என்ற போதிலும், சமீப நாட்களில் தினசரி பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை தினமும் கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையினை வெளியிட்டு வருகிறது. அரசின் இன்றைய அறிக்கையின் படி, தமிழகத்தில் புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல் – DEO உத்தரவு!
இதனால் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,05,647 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும், 27 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். அதில், 6 பேர் தனியார் மருத்துவமனையிலும், 21 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 34,788 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 18,352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
மேலும், தற்போதைய நிலவரப்படி, 1,797 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,52,507 ஆக உள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று மட்டும் 170 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழக தலைநகரான சென்னையில் 543065 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.