தமிழகத்தில் இன்று 1604 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் விவரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 1,604 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு தற்போது சில நாட்களாக மெல்ல குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டுள்ளது.
போலி இணையதளங்களில் வாடிக்கையாளர் சிக்க வேண்டாம் – பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி எச்சரிக்கை!
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 1,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தமிழகத்தில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,02,489 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 25 பேர் இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 34,734 ஆக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேர நிலவரப்படி, 1,863 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 25,48,868 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 18,887 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,53,068 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.